Monday, May 7, 2007

நீயும் நானும்….!



உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது

*

உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை

எடுக்க விட்டதில்லை உன் வெக்கம்

*

நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய்
ஏனெனில் என்னிடம் மட்டும்தானே
நீ வெக்கப் படுகிறாய்

*

நான் என்னைப் பற்றி சொன்னால்
ரசிக்கிறாய் உன்னைப் பற்றி சொன்னால்
வெக்கப் படுகிறாய் ஆகா உன் வெக்கத்துக்கும்
பழக்கி விட்டாயா உன் சுயநலத்தை

*

நான் மயிலே மயிலே என்று அன்பாய் கூப்பிட்டாலும்
மயில் இறகு போட்டதில்லை ஆனால் நான் ஆசையாய்
உன் பெயரை கூப்பிட்டால் போதும் அடடா
நீ அழகாய் வெக்கப்படுவாய்

*

என்னைக் கண்டதும்
வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும்
நான் காணாமல் போகிறேன்

*

என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது ஆமாம்
உன் வெக்கம் பேசியதில்லையே

*

உன் வெக்கத்தை பற்றி கவி எழுதித்தர
ஆசைதான் ஆனால் அந்தளவுக்கு நான்
படித்தவன் அல்ல வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை கவிதையாய்
எழுதித்தருகிறேன்

-யாழ்_அகத்தியன்

No comments: