என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்
*
கிடைத்தது எல்லாம் பெரிதாகவே
தெரிந்தது நீ கிடைக்காமல் போகும்
வரை
*
உன் நினைவுகளுக்கு ஆடை மாற்ற
வேண்டும் கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா
*
நீ வேண்டும் என்பது என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும் என்பது என் புதுக் கவிதை
*
நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment