Tuesday, May 8, 2007

என் கையில் உன் பேனா

உன்னைத் சந்தித்து சில மாதமே ஆனபோதும்
எப்படியானேன் உன்னவளாய் இன்றுவரை உன்னை
நேரில் சந்தித்ததே இல்லையே எப்படி எப்படி_என்னை
உன் வசம் இழுத்தாய் எதற்காய் உன் வசமானேன்
எதுவும் புரியாதவளாய்

*
இதுவரை தூக்கம் வராமல் என் விழிகள் துடித்ததே

இல்லையடா ஏன் தான் இன்று உன் பெயரை கோடி
முறை உச்சரிக்கும் வரை தூங்க விடுவதில்லை உன்
நினைவு

*
உன்னை பொறுக்கி என்று கூட திட்டதுணிந்தவள் நான்

ஏன் தான் உன்னை நீயே திட்டினால் கூட என் மனம்
பொறுப்பதில்லை காதலை மதித்த போதும் நான்
காதலிக்க துணியாத கோழையாய்த்தானிருந்தேன்
எப்படி என்னை வாழ்ந்தால்உன்னோடு என சொல்ல
வைத்தாய் சொல் என்னவனே சொல்

*
என் கிறுக்கல்கள் என்றாலே கை தட்ட பலர்

இருந்த போதும் என் கண்கள் உன் கவிதைக்காகவே
தினம் விடியவைக்கும்

*
என்னவனே நான் கிறுக்கி எறிந்த காகிதத்தில்தானே

இன்னும் கசங்கிக்கிடக்கிறது நான் சொல்லத் துடிக்கும்
என் காதல்

*
என் மேல் எனக்கே இல்லாத அக்கறையை உன்
மேல் கொண்டேன் அதனால்த்தானோ கனவைக்கூட
தினம் விழித்திரிந்து காண்கிறேன்

*
உன் விழிபார்க்கும் தூரத்தில் நானில்லாத
போதும் உன்னைக் காக்க எங்கோ ஓர்
மூலையில் உன் இமையாக (வரக்)
காத்திருக்கும் நான்

-யாழ்_அகத்தியன்

No comments: