கனவில் வந்தவளைக்கை
கூப்பி வரவேற்றேன்
தூக்கத்தைத் திறந்து
*
என் கவிதைத் தலைப்பை
படித்துவிட்டு பொறாமை
பட்டார்கள்உன் பெயரை
தெரிந்தவர்கள் மட்டும்
*
கையெழுத்து அழகானால் தலை
எழுத்து நல்லா இருக்காதாம்
உண்மையானது உன்னால்
அழகான என் கையெழுத்தால்
*
இடமில்லாமல் என்னை இறக்கிவிட்டுப்
போனபடகில் ஏறிப்போனது என் காதல்
*
நீ என்னைப் பிரிந்ததை யார் கேட்டாலும்
நானாக பிரிந்தேன் என சிரித்தபடி சொல்லி
விட்டு தூக்கத்தில் அழுகிறேன்.
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment