Monday, May 14, 2007

தேடல்!

எழுதிய கவிதையை தொலைத்த
கவிஞன்போல் உனக்குள் என்னைத்
தேடி களைத்துவிட்டேன்

உன் மனதின் குப்பைத்
தொட்டியைத் தவிர

தெரிந்தும் இனி
தேட இஸ்ரம் இல்லை
உன் குப்பைக்குள் நான்

ஒரு குப்பையாய்
இருக்கிறேன்

என்பதை தெரிந்து கொள்வதை விட
என் தேடலின் பிழை என்று எண்ணி

வாழவே விரும்புகிறேன்.

-யாழ்_அகத்தியன்

No comments: