Thursday, May 17, 2007

கவியானவளே...[06]

என் காதல் கவிதையில் இருந்து
விலக்கி விடப்படும் பிழையான
எழுத்துக்களோடு சென்று விடுகிறது
உன் மேலான என் காதலும்

*
என் கவிதைகள் கூட உன்னை
காயப்படுத்த கூடாதென்றுதான்
எழுத்துப்பிழை விட்டாலும் ஆயுத
எழுத்தை விட்டதில்லை என்
கவிதைக்குள்

*
தயவு செய்து என் கவிதைகளை
வாசித்துவிட்டு அமைதியைப்
பேணுங்கள் கல்லறையில் என்
பேனா தூங்கிக் கொண்டிருக்கிறது


-யாழ்_அகத்தியன்