இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ
*
யார் சொன்னது
கண்பட்டால்
வாழமுடியாது என்று
என்னவள் கண்
பட்டதால்தானே
வாழ்கிறது
என் கவிதைகள்
*
உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு
*
உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா
*
வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்
*
உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்
-யாழ்_அகத்தியன்
Thursday, December 24, 2009
Subscribe to:
Comments (Atom)
