Wednesday, May 9, 2007

என் பேனாவின் ரகசியம்!

என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை

*
கண்மூடி கிறுக்கிவிட்டு கண்

திறந்து தேடுகிறேன் ஏதாவது
கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று

*
தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது

என் பேனாதான் உன் பேனாவுக்கு
நன்றி சொல்ல

*
என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்

நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி
பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு


*
உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா

யாருக்காக தலை குனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று

*
உன் தோழிகள் மட்டும்தான் கண்டு

பிடிக்கிறார்கள் உன் சினுங்களை
மட்டும் கவிதையாய் வடிக்கிறது
என் பேனாவென்று

*
உன் புகைப்படத்தோடு ஒரு நாள்

இருந்த பின்தான் என் பேனா கவி
எழுத மறுக்கிறது

*
உனக்காய் எழுத நினைத்த எந்த

கவிதையையும் எழுதவேயில்லை
என் பேனா அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்

-யாழ்_அகத்தியன்

No comments: