ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்
உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்
*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா
பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்
நீ தூக்கவே
முடியாதளவுக்கு
*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு
*
ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்போது
*
எல்லாம் சேலைதான்
எனினும்
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது
*
என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட
நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்
-யாழ்_அகத்தியன்
Monday, March 17, 2008
அன்னையே தெய்வம்...!
தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்
*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு
*
என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்
*
எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா
குழந்தைக்கும்
ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே
*
என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை
*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்
*
நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்
வலிக்காக அழாமல்
என் மேல்
விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர்
சிந்தியதை
*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்
இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது
-யாழ்_அகத்தியன்
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்
*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு
*
என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்
*
எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா
குழந்தைக்கும்
ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே
*
என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை
*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்
*
நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்
வலிக்காக அழாமல்
என் மேல்
விழுந்த தூசிக்காய்
நீ கண்ணீர்
சிந்தியதை
*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்
இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது
-யாழ்_அகத்தியன்
Sunday, March 16, 2008
இலக்கியமானவளே...!
எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை
*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை
*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது
*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் என்றாலும்
அவளால் வாசிக்கப்படும்
கவிஞன் நான்
*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்
-யாழ்_அகத்தியன்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை
*
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை
*
அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது
*
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் என்றாலும்
அவளால் வாசிக்கப்படும்
கவிஞன் நான்
*
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்
-யாழ்_அகத்தியன்
வரமானவளே...!
என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்
*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்
*
நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு
*
ஆயிரம் கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி
கவிஞனானேன்
*உனக்கான கவிதை என்று
தெரிந்தும் எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்
-யாழ்_அகத்தியன்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்
*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்
*
நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு
*
ஆயிரம் கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி
கவிஞனானேன்
*உனக்கான கவிதை என்று
தெரிந்தும் எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்
-யாழ்_அகத்தியன்
மனமானவளே..!
உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்
*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு
*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்
அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்
*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது
எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது
*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ
நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்
-யாழ்_அகத்தியன்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்
*
உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு
*
காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்
அத் தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்
*
என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது
எனக்கான கவிதை நீ
என்பதின் பெருமை
எனக்குரியது
*
நான் உறங்கா நேரத்தில்
என் விழியாய் நீ
நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும்
விழியாய் நான்
-யாழ்_அகத்தியன்
Subscribe to:
Comments (Atom)
