Saturday, May 12, 2007

காதலே வருவாயா

உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால் எனக்கு
காத்திருப்பதில் அதிக சுகம்

*
உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை உன்
தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பம்

*
கவிதைக்காய் காத்திருப்பதில்
கவிதை பிறப்பது எனக்கு மட்டும்தான்
உனக்காய் காத்திருந்து என் எழுத்துக்களுக்கு
கால் வலிக்கிறது

*
தயவு செய்து வரும் போது
வெறும் கையோடு வந்துவிடாதே
என்னைக் காக்க வைத்து விட்டுவரும்

போது கவனம் நீந்த நேரிடலாம்

*
என் கவிதையின் கண்ணீரில்
இன்றாவது காதலைச் சொல்லத்தான்

தினமும் காத்திருப்பேன் இதுவரை
சொல்ல விட்டதில்லை காதல்

*
காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் கவிஞனாய்
கன நேரமாய் காத்திருந்தாலும்

நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ

*
உனக்காய் காத்திருந்த இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால்
கவலைப்படாதே என் கால்களின்
கவிதைகளையாவது விட்டுத்தான்
போயிருப்பேன்


-யாழ்_அகத்தியன்

No comments: