Thursday, May 10, 2007

கவியானவளே… [02]

கவிதை எழுதுவதை நிறுத்திவிட
நினைக்கும் போதெல்லாம் உன்
பெயரை எழுதி தொலைக்கிறது
என் பேனா

*
ஒவ்வொரு தூக்கத்திலும் அடிக்கடி
விழிக்க வேண்டி வருகிறது உன்னோடு
தூங்குவதாய் கனவு காண்பதால்

*
குடி குடியைக் கெடுக்கும் என்பதை

எழுதிவிட வேண்டும் உன் உதட்டிலும்

*
காதல் பாடத்தில் இருவருமே

சித்தி அடைந்தோம் மறந்ததில்
நீயும் மறக்காததில் நானும்

*
நான் பயணிக்கும் பாதையெங்கும்

என் கவிதைகளை விதைத்துக்
கொண்டேபோகிறேன் ஏதெனும்
ஒன்றிலாவது நீ இழப்பாறுவாய்
என்ற நம்பிக்கையில்

*
யாரவது எனக்கு எழுந்து நின்று

இடம் தர மாட்டார்களா என
உதைக்கிறது உன் நினைவு

-யாழ்_அகத்தியன்

No comments: