Wednesday, October 31, 2007

அசத்தலானவளே..!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம்
உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன

அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்

*
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ

*
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாதுபாடு
படுவதுதான் என்னை
ரசிக்க வைக்கிறது

*
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்

*

நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு

அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 30, 2007

அன்பானவளே..!

எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது யார்
ஊர்ந்தாலும்

அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும் தெரியும்

*
என் கவிதைகளின் எழுத்துப்
பிழைகளை நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன் உடையை நீ
சரி செய்வது

*
நீ
ஆசைபட்ட பொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்

பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்

*
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்

*
பூ
செடியை சுற்றுமா என்ன..?

நீ
துளசிச் செடியை
சுற்றும்போது

என்னை நானே
கிள்ளிப் பார்க்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Sunday, October 28, 2007

அழகானவளே..!

இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்

நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்

*
பேசாமல் நான் சிவப்பு நிறத்தில்
பிறந்திருக்கலாம் இப்படி நீ முத்தம்
கொடுத்த (கடித்த) இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்

*
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்

எப்படி...
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்

என்னை நானே கிள்ளிவிட்டு
நீ கிள்ளியதாய் பொய் சொல்கிறேனே

*
என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்

நீ
பார்க்காமல் போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது அதுதானே

*
நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று


-யாழ்_அகத்தியன்

Friday, October 26, 2007

யார் குற்றமோ..!

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை
காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்

நான் உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்


-யாழ்_அகத்தியன்

அன்பே ஆருயிரே..!

ஞாபகபடுத்திக் கொண்டே
இருக்க மறந்து போன
காதல் நம்முடையது

அழகிய கவிதையே
என் பேனவின் மையே
உன்னைக் கிறுக்கியே நான்
இறந்து கொண்டிருக்கிறேன்

தினம் ஏக்கதில்
விழித்திருப்பேன்
பாதையெங்கும் உன்
விம்பம் தேடி

எங்கே நீயென தேடித் தேடியே
நித்தம் முத்ததில் நானிருப்பேன்

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி
பகலாக்கியிருக்கும் எல்லாம்
அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை என
என்றும் காத்திருக்கும் உன்
காதலன் நானல்லவா.....

காதலி எனைக் காதலி
உன் கரம் பிடிக்க கை
நீளுதே

இதமான தென்றலை என்றும்
வீசுவேன் என்னருகே நீயிருந்தால்
உன் மடியில் நான் தூங்க

எங்கே நீ சென்றாலும் உன்னோடு
ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்
என்பதை நம்பிவிடு

ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர அகிலமே
எதிர்த்தாலும் கோழையாய் நான்
முலையில் படுத்துறங்கமாட்டேன்

போராடியே போராளியாய்
உன் கை பிடிப்பேன் என்
உலகமே நீயாக வேண்டும்
என்பதே என் கொள்கை

எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்
உன்னைக் கேக்க வாசல் வருவேன்

அதுவரை பொறுத்திரு முடிந்தவரை
சமாதானமாய் பேசிப்பார்ப்போம்

சிறந்த வீரனுக்கு அழகு பொறுமையாம்
அழகு தேவதையே உன்னால் வீரனானேன்
உனக்கென பொறுக்க மாட்டேனோ


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 24, 2007

மலரானவளே..!

நிலவு பிடிக்குமா என்கிறாய்
நீ காணாமல் போனால் உன்னை
கண்டுபிடிக்க நிலவைத்தானே நான்
அடையாளாமாய் வைத்திருக்கிறேன்

*
எல்லா பூக்களும் எப்படியோ
வாடிவிடுகிறது உன் புன்னகை
பூ மட்டும்தான் வாடமலிருக்க
பூக்கிறது

*
குடிச்சாவது பழகியிருக்கலாம் நான்
முத்தம் தராவிட்டால் குடிச்சிடுவேன்
என்று சொல்லியே கெஞ்சாமல் விரும்பியளவு
உன் முத்தங்களால் குளித்திருப்பேன்

*
என்னை இதயம் இயக்கவில்லை
என் இதழ்கள்தான் இயக்குகிறது
பார் முத்தம் கொடுக்க உன்
உச்சி முதல் பாதம்வரை மாறி மாறி
என்னை இயக்கிக் கொண்டிருக்கிறதே

*
என்னை கவிஞனாக்கியது
மட்டுமல்ல கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்

*
எதற்காக நீ
பூச் செடி வளக்கிறாய்
உன்னைப் போல் நடமாடும்
பூவாக பூக்கவே முடியாது
என்று ஆடிக்காட்டவா


-யாழ்_அகத்தியன்

எங்கே என் உயிர்..!

எப்போதும் குளிரும் உன்
நினைவுகளில் நடு நடுங்கித்தான்
போர்த்துக் கொள்கிறேன் என்னைத்
தினமும் நான்

பாய் விரித்தும் உறங்க முடியாமல்
எனை சுருட்டிக்கொண்டிருக்கிறது
பிரிந்துபோன உனை இமைக்காது
தேடும் என் கண்கள்

நீண்டுகொண்டே போகும் இரவுகளில்
வளரும் நிலவோடு வளர்ந்துகொண்டே
போகும் உன் நினைவுகளை வழி
நடத்துகிறது இந்த பழைய மனசு

காயங்கள் பல கண்டபோதும்
நீ தூங்க புல்லாங்குழலானேன்

வலிதாங்கியே பழகிய என்னை
சுமைதாங்கியாக்கி அழகாய்
ஏறியமர்ந்தாய்

உன்னைச் சுமந்தே
உலகம் சுற்றிவந்தேன்
சுமக்கும் கழுதையாய் நான்

ஓரு நாள் ஏனோ உனை
இறக்கிவிடச் சொன்னாய்
பதறிப்போய் நான்
உன் வீட்டுவாசல் என்பதை
கவனிக்காது பத்திரமாய்
ஏற்றிய அதே கவனத்தோடு
கசங்காமல் இறக்கிவிட்டேன்

இதோ வாறேன் என
உன் வாசல் நுழைந்தாய்
இன்றுவரை நான் உனக்காய்
சிலையானதுதான் மிச்சம்

என்னை பட்டமாக்கி பறக்க
விட்ட காதல் தேவதையே
என்னை நானகவே
விட்டிருக்கலாம் நீ

கசக்கி எறிந்த கவிதையாய்
குப்பை தொட்டியில் கிடந்திருந்தாலும்
இப்பிடி நூலறுந்த பட்டமாய் உன்னிலே
நான் சிக்கிக் கிடப்பதைவிட அது மேல்

சரிவிடு
இனி எப்போதும் என்னைத் தேடி
வரமாட்டாய் என்பது புலபட்டுவிட்டது

இருந்தாலும்
உன் காதல் வார்த்தைகளால்
என் உயிரை எடுத்துப் போனாயே
அதையாவது
யாரிடமாவது கொடுத்தனுப்பு

சிலையாகிப்போன நான்
இறந்து போக வேண்டும்


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 23, 2007

உன்னதமானவளே..!

நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை தந்துகொண்டே
இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை
படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய்
என்ற நம்பிக்கையில்

*
தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய் அதையும்
பார்ப்பம் பாரமல் பார்க்காம
எத்தனை மட்டும் பார்க்கப்
போறாயென்று

*
சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்

*
ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ

*
நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு
என் கவிதையை படித்துவிட்டு
யாரு எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே


-யாழ்_அகத்தியன்

தாயுமானவளே..!

நீ வரும்வரை என்னை எவரும்
கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது உன்னோடு கூட
வரலாம் நான்

*
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது

*
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்

*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது

*
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே


-யாழ்_அகத்தியன்

Monday, October 22, 2007

இதயத்தில் நீ..!

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரானாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்


-யாழ்_அகத்தியன்

அம்சமானவளே..!

அவ்வளவு
ஆசையா உனக்கு
என் மீது
கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்

இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்

*
அமாவாசை விரதத்தில் நீ
"கா கா கா" என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்

உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று

*
இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்
எப்படித் தெரியும்
நீதான் குடை
விரித்துவிட்டாயே

*
என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ...

*
என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும் உன்
கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்


-யாழ்_அகத்தியன்

Sunday, October 21, 2007

அழகு தேவதையே..!

அவசரமாய் நான் வீதி
கடக்கையிலும் நீயே
நினைவுக்கு வருகிறாய்

எப்போதோ உன்னோடு
வீதி கடக்கையில் நீ
குட்டுவைத்து குழந்தை
போல் எனை கூட்டிச்
சென்றாயே

*
என்னை எழுத
வைப்பதற்காகவே
கவிதையாய் படுத்துக்
கிடப்பாய் எனக்கு முன் நீ

*
நீ எழுதிய முதல் கவிதை நான்
ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்

*
உன்னை விட தொட்டால்
சிணுங்கி பரவாயில்லை
நீ பேசினாலே சிணுங்கிறாயே

*
பெண்களுடன்
சுற்றி இருக்கீங்களா
என்று கேக்கிறாய்
இல்லையென்றால் நீ
எனக்கு தேவதையாய்
தெரிந்திருக்கமாட்டாய்


-யாழ்_அகத்தியன்

என் கனவே நீதான்..!

கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை

நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்

மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்

மறுபடி நான்
தூங்கிப்போனால்

என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்


-யாழ்_அகத்தியன்

Saturday, October 20, 2007

அடுத்த ஜென்மத்திலாவது...!

நான் உன் கைக்கடிகாரமாய்
பிறந்திருக்கலாம் நீயாக எனை
பார்க்காமல் போனாலும் யாரவது
நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்

*
உன்
கால்கொலுசாய் நான்
பிறந்திருக்கலாம் நீ
நடக்கையிலாவது எனை
இந்த உலகம்திரும்பி
பார்த்திருக்கும்

*
உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம் சிக்கல்
எடுக்கும் ஞானியென எனை
உன்னோடு வைத்திருப்பாய்

*
நான் உன் நெற்றிப்பொட்டாக
பிறந்திருக்கலாம் கொஞ்ச நேரமாக
இருந்தாலும் உன்னை பார்க்க வைத்த
பெருமையோடு உன் கையாலே
இறந்துபோயிருப்பேன்

*
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய்
பிறந்துவிட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது
நீ போடும் செருப்பாக
பிறக்க வேண்டும் நான்

அப்போதுதானே
என்னை பிடித்து உன்னை
காதலிபவனுக்கு அடிப்பாய்


-யாழ்_அகத்தியன்

தேவதையானவளே..!

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

*
நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்

*
நீ
கவிதை
படிக்கிறாயா

இல்லை

உன்னைக்
கவிதை
படிக்கிறதா

பார் மறுபக்கம்
போக பஞ்சிப்படுவதை

*
உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது

இசைக்கும் உன் கால்
கொலுசு முதல்

*
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்

நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்


-யாழ்_அகத்தியன்

Friday, October 19, 2007

ஊமையானவளே...!

தினமும் நான் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்த்து நீ வெளியிடுகிறாய்
உன் மெளனக் கவிதையை

ஆரம்பத்தில் உன் மெளனத்துக்காகவே
இடைவேளையின்றி பேசிக் கொண்டிருப்பேன்
நீயும் பேசமால் கேட்டுக்கொண்டே இருப்பாய்

இப்பொழுதெல்லாம் உனக்காக பேசிப் பேசியே
உன்னை மாதிரியே நானும் மெளனியாகிவிட்டேன்

எப்பொழுதெல்லாம் மெளனமாக இருக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் உன் நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்

எப்பொழுதெல்லாம் பேசுகிறேனோ
அப்பொழுதெல்லாம் உன்னை பற்றியே
பேசுகிறேன் உன்னோடு மட்டும்

மெளனமே சிறந்த மொழி
மெளனமே பேசவைக்கும் மொழி
மெளனமே பிடிக்கவைக்கும் மொழி
மெளனமே சிறந்தவிரதம்

என்பதை புரியவைத்து
என்னையும் உன்னைப் போல்
மெளனியாக்கிவிட்டாய்

உண்மைதான்
மெளனமே அழகான மொழி
நான் பேசாத பொழுதுகளில்

ஆனாலும்
என்னைத் தினம் கொல்லுவது
உன் மெளனமொழிதான் என்பது
உனக்குத் தெரியுமா...?

அன்பே அறிந்துகொள்
உன் மெளனத்தால் பாதிக்கப்படுவது
மற்றவர்கள்தான் என்பதை


-யாழ்_அகத்தியன்

Thursday, October 18, 2007

இரக்கமில்லாத குண்டுவிமானமே..!

தும்மலுக்கு மருந்தெடுக்க
போனவன் குண்டுமழையில்
நனைந்தபடி வீடு வந்து
சேர்ந்தான் பிணமாக

*
கொள்ளி வைக்க யாரும்
மிஞ்சவில்லை ஒரே
குண்டில் குடும்பமே பலி

*
குழந்தையில் வீட்டில்
ஊர்ந்து பழகியது உதவி
செய்கிறது குண்டுவிமானம்
வருகையில் தெருக்களில் ஊர

*
பத்து மாதம் சுமந்தவளும்
இறந்து போகிறாள் பதினைந்து
நிமிடம் சுமக்க முடியாத
விமானத்தின் குண்டுகளால்
*
எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை

*
குண்டுகளை தயாரிப்பவர்களே
நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி,
தங்கையோடு பிறந்ததில்லையா...?


-யாழ்_அகத்தியன்

உன் பெயரே கவிதை..!

7ம் ஆண்டு வகுப்பறை
மேசையில் முதல் முதலாக
கிறுக்க ஆரம்பித்தேன்

இன்றும் கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்

கண்ணில்படும்
கரும்பலகையிலும்
விளம்பர சுவர்களிலும்
பேருந்து இருக்கையிலும்
பிடித்த மரங்களிலும்

ரசித்த உலக
அதிசயங்களிலும்

கிடைக்கும் வெற்றுக்
காகிதங்களிலும்
உன் பெயரோடு
என் பெயரை

எனினும்
இன்றுவரை என் பெயர்
கிறுக்கலாகத்தான் தெரிகிறது
நான் கவிஞனான பிறகும்

ஆனாலும்
உன் பெயரே எனக்கு பிடித்த
கவிதையாகவே இன்றும் இருக்கிறது


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 17, 2007

காதலான கவிதைகள்...!

நீ
என்னோடு வருகையில்
காற்று என்னைத் திட்டுகிறது
நீ
தனியாய் போகையில்
காற்றை நான் திட்டுகிறேன்

பார் காற்று புயலாய் மாறி
உன் ஆடை களைய முயற்சி
செய்வதை

*
பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
நடக்கையிலும் ஏதாவது ஒரு
முள் குத்திவிடுகிறது உன்
இதயத்தை ஞாபகப்படுத்த

*
இரவிலும் தூங்க விடாததுக்கும்
சேர்த்து பகலிலும் தூங்குகிறது
என் கைபேசி நீ என்னை
தொலைத்ததால்

*
உன்னைச் சுற்றுவதால் நீ
கிடைக்காமல் போனாலும்
உன் நினைவாவது கிடைக்குமே
அது போதும் எனக்கு நான்
யாரையும் சுற்றாமலிருக்க

*
உன்னில் நான் இல்லாத
இடத்துக்கு மேல இன்றும்
தொங்குகிறது என்
இதயச் சங்கிலி


-யாழ்_அகத்தியன்

உண்மை சொல்வாயா..?

உன்னோடு ஓடிக்கொண்டிருந்த
நதியாக நான் இருந்த போது
ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது

ஏனோ
குளமாக தேங்கிவிட்டேன்
ஆனாலும் என்னைச் சுற்றி உன்
நினைவென்னும் குளக்கட்டுகளே

உன்னோடு ஓடியதும்
நானே
உன்னோடு உருண்டதும்
நானே
உன்னோடு விழுந்ததும்
நானே
உன்னோடு கலந்ததும்
நானே

ஆனாலும் நீ
நானில்லாமலே சேர்ந்துவிட்டாய்
வாழ்க்கை எனும் கடலில்

நான்தான் உன்னை நினைத்தே
தேங்விட்டேன் குளமாய்

இருந்தாலும்
யார் வீட்டு குழம்பிலாவது
நீயும் ஒரு நாள் உப்பாகலாம்
நானும் ஒரு நாள் நீராகலாம்

அப்போதாவது
உண்மை சொல்வாயா..?
ஏன் என்னை விட்டு
சென்றாயென்று


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 16, 2007

குழந்தைதான் காதல்..!

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதை
காதலி மட்டும்
சுமப்பதில்லை
இருவரும் சுமப்பது

காதல் ஒரு
குழந்தைதான்
ஆனால் அதால்
அழமட்டுமல்ல
பேசாமல் அழவும்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
ஆசைப்பட்டால் அது
கிடைக்கும் வரை அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எதைக் கொடுத்தாலும்
உடைத்துப் பார்க்கும்

காதல் ஒரு
குழந்தைதான்
சிரிக்கவும்
அழவும்தான்
தெரியும்

காதல் ஒரு
குழந்தைதான்
வேண்டும்
என்றாலும்
அழும்

வேண்டாம்
என்றாலும் அழும்

காதல் ஒரு
குழந்தைதான்
எல்லாராலும் தூக்க முடியும்
எல்லாரலும் அழுவதை
நிறுத்த முடியாது

காதல் ஒரு
குழந்தைதான்

ஆனாலும்
அதை யாராலும்
எறியவும் முடியாது

அதை யாரலும்
அனாதையாக்கவும்
முடியாது

அதற்கு
பெற்றொர்களே
கிடையாது

ஆம்
யாரின் உதவியும் இன்றி
யாரின் உறவும் இன்றி
பிறப்பது இந்தக் காதல்
குழந்தை மட்டும்தான்.


-யாழ்_அகத்தியன்

பாடல்வரியாக கிறுக்கிப்பார்த்தேன்

ஒரு வார்த்தையேனும்
சொல்லாயோபெண்ணே
அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்

நித்தம் உனை நினைத்தே
என் ஜீவன் துடிக்கிது பந்தம்
பாசம் எல்லாம் நீயே
பழகிட வா கண்ணே

நீயே எந்தன் உலகம்
நீயில்லாத உலகம் என்
கல்லறையல்லவா உயிரே
உன்னைச் சுமக்கத் தாயவேன்
உன் மடியில்என்றும்
குழந்தையாவேன்
நீயே என் சொந்தமல்லவா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

என் உயிராய் நீயிருந்தால்
உனக்காய்த் ( நான்)துடிப்பேன்
என்னுயிரே நீதானே
என் கவி நீயென்றால்
உனக்காய் ( நான்)சொல்லாவேன்
என் கவி நீதானே

என் கனவுகள் நீதானே இரவாய்
நீயிருந்தால் என் கற்பனை நீதானே
என் கவியாய் நீயிருந்தால் வா
பழகிட வா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

உனக்காய் வாழவே நான் பிறந்தேன்
என் இதயம் துடிப்பதே நீ வாழத்தானே
கடலுக்கு அலையிருக்கு
பூவுக்கு புயல் இருக்கு அன்பே
எனக்கென்று ஏதிருக்கு உன்னைவிட
யாருமில்லை உன்னைப் போல ஏதுமில்லை
வாழ்ந்திடுவோமே ஒன்றாக வா....

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)


-யாழ்_அகத்தியன்

Sunday, October 14, 2007

கண்ணீரின் வரிகள்...!

உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்

இது தெரிந்தால்
என் மனம்தான்
படாது பாடு
படப்போகிறது

அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே தெரியும்

நீ கைவிட்டது
தெரியாதுதானே...

பரவாயில்லை
நீ விட்டுப்போனது
என்னை மட்டுமாக
இருக்கட்டும்

என்
மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே

அதாவது
அழாமல் வாழட்டும்...

இந்தக்
காதலில் மட்டும்தான்

ஏமாற்றியவரே
ஏமந்து போவது

-யாழ்_அகத்தியன்

உன் நினைவே மாயம்...!

உன் மீது நான் கொண்ட காதலை
இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ
எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும்

உனக்காய் எழுதிய கவிதைகளை
அச்சடித்திருந்தால் புதிய காவியம்
ஒன்று கிடைத்திருக்கும்

நீயோ....
காதலால் எனக்கு
அழகானாய்
கவிதையால் எனக்கு
நிலவானாய்

ஆனாலும்
நீ நினைத்த மாதிரியே என்
இதயத்தை ஒத்திகை மேடையாக்கி
உன் காதல் அபிநயங்களை அழகாய்
பழகிச் சென்று விட்டாய்

இதில் என்ன ஆச்சரியம் என்றால்
கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர்
இல்லமாலே நீ நீயாவே நடன
ஆசிரியையானதுதான்

திருவிழா நெரிசல்களில்
தொலைத்துவிட்டாலும் தேரில்
பவனி வந்து எனக்குத் தரிசனம்
தருவது உன் நினைவு மட்டும்தான்

மறப்பதா..?
உன்னையா...?
நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ
பிரியாமாய் பேசியதையும்
நீ
பிரியமின்றி பிரிந்ததையும்
கவிதையாய் கிறுக்கவைத்தே
என்னைக் கவிஞனாக்கிறது

உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.

ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்

அதுசரி...
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியும்


-யாழ்_அகத்தியன்

Saturday, October 13, 2007

எஸ்.எம்.எஸ் கவிதைகள்

எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்.

*
உன்
கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்

*
அமாவாசையிலும் நிலாவோடு
வாழ்ந்து கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்

*
உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது

*
நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்

*

நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்

*
நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை எண்ணிப்பார்பதையே
நான் செய்து கொண்டிருக்கிறேன்

*

இன்று என்னைவிட்டு
விடைபெற்று போகிறாய்
நாளைய உனக்காக நான்
காத்திருக்க ஆரம்பிக்கிறேன்

*
நீ
எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக்கூடாது
என்பதில் மிகத் தெளிவாய்
இருக்கிறேன்.

*
உனக்கு
பொய் சொல்வது பிடிக்காது
தெரிந்தும் சொல்கிறேன்
பொய்சொல்லாத நீ கிடைக்க
வேண்டுமே எனக்கு

*
உன் புகைப்படத்தில் நீ
யாரோடு நிற்கிறாய் என்பதே
என் கண்ணுக்குத் தெரியவில்லை

என்
கண்ணுக்கு தெரிவது
நீ மட்டும்தானே


-யாழ்_அகத்தியன்

வாழ்வதற்கே வாழ்க்கை

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்

*

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

*
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது

*

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஒட்டாமே

*
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல

அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்

*

இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்

*
உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்

ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

*
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

*
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

*
உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

*
வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்

*
தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

*
குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்ட
சிலையாகு

*
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

*
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்


-யாழ்_அகத்தியன்

Friday, October 12, 2007

சில காதல் கவிதைகள்...!

நீ
என் இதயத்தில் இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள் என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன்

*
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்

என்னுடைய பிழைகள்
எல்லாமே நீ கவிதையாக
இருந்தும் எழுதியதே

*
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன்மட்டுமல்ல

உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும் அவர்களின்
கண்ணாடியின் தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட

*
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்

உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும் எனக்கு

ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான் இருக்கிறது

*
நிலா; நீ வேண்டும்
என்கிறது என் இரவுகள்

நிலா; நீ வேண்டும்
என்கிறது என் நட்சத்திரங்கள்

ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்

*
நீ நீலாதான்அதற்கான
சாட்சியங்கள் என்னிடம்
நிறையவே உண்டு

நீ நிலாதான் அதனால்தான்
நட்சத்திரங்கள் எனும்
கூட்டத்தோடு எப்போதும்
வருகிறாய்

*
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்

திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்

*

இன்னும்
எனக்கு ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய உன்
குழைதைத்தனம்

*
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை

உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்


-யாழ்_அகத்தியன்

Thursday, October 11, 2007

அகதியாய் நான்...[2]

அண்ணன்
புலம்பெயர்ந்த நாட்டில்
சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்

தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்

*
எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர

*
ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்

*
புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும்
என் குடும்பத்தின் பசியைத்தான்
போக்கமுடிந்தது தூங்கவைக்க
முடியவில்லை

*
புலத்தில் வயிறு முட்ட
உண்டாலும் வீசவில்லை
அம்மாவின் கைவாசம்

*
நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற

*
அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா என்றாலே இறக்கிறோம்


-யாழ்_அகத்தியன்

தேடித்தாருங்கள் என் பேனாவையாவது!!!

என் முதல் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக் காட்டுகிறது உன்
பெயரை என் பேனா.

என்று எழுதியதும்
என் பேனாதான்

விலக விலகத்தான் காதல்
அதிகரிக்குமாமே எங்கே ஒரு
தடவை கண்மூடித் திற

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு நீ
காதலிக்காததால் தலைக்கனம்
என்கவிதைகளுக்கு

என்று எழுதியதும்
என் பேனாதான்

உனக்கு யாரோ ஒருவனின்
கவிதை பிடித்ததில் இருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்னில் ஏதாவது ஒன்று உனக்கு
பிடித்ததில் கவிதையாவது
இருக்கட்டுமே என்று.

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவள் என்னைக் கொஞ்சம்
கொஞ்சமாய் மறந்து தொலைத்த
பாதையில்_ நான்என்னைத் தேடி
எடுத்துக் கொண்டேன் அவளை
நினைத்து வாழ

என்று எழுதியதும்
என் பேனாதான்

களைப்பில் எந்த இடத்திலும்
இளைப்பாறிவிடாதே அந்த
இடத்தில் இளைப்பாறியே
களைத்து போகிறேன் நான்.

என்று எழுதியதும்
என் பேனாதான்

கரைந்த துளியை தேடும்
புல் போல் தேடுகிறேன் உனை
நீ வேரோடு கலந்ததை மறந்து

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ இல்லாத காதலும்
காதல்இல்லாத நீயும்
என்றும் எனக்கு தோல்வியே!

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன் கோவத்தை என் மேல்
இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய்
பாவம் நான் படாத பாடுபடுகிறேன்
உன் கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நீ
தாமதமாய் வரும்வரை
எப்படி சமாளிபேன் என்
கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும் அம்மா
வேணும் என்கிறது.

என்று எழுதியதும்
என் பேனாதான்

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி
இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

என்று எழுதியதும்
என் பேனாதான்

தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில் உன்
ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது

என்று எழுதியதும்
என் பேனாதான்

அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை

என்று எழுதியதும்
என் பேனாதான்

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றிவருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா நான்
உன்னை சுற்றி வருகிறேன்

என்று எழுதியதும்
என் பேனாதான்

உண்மையில்
ராசியான பேனாதான்
என்னவள் போல்

தயவு செய்து யாரவது
தேடித் தர முடியுமா..?
இரண்டில் ஒன்றையாவது

-யாழ்_அகத்தியன்

Wednesday, October 10, 2007

நான் படித்தவனல்ல...!

நான் படித்தவனல்ல
படிபிக்கப்பட்டவன்
அனுபவங்களால்.

உங்க ஊர் பள்ளியில்தான்
நீங்கள் பட்டம்பெற்று
இருப்பீர்கள்

நான் ஏடு துவக்கியதுதான்
சொந்த ஊர் பள்ளியில்
ஆரம்ப கல்வி படித்ததே
மூன்று பாடசாலையில்.

யுத்தம் என்பதை நீங்கள்
பாடத்தில் படித்திருப்பீர்கள்
அனால் நான் யுத்தத்துக்குள்
பள்ளி சென்றவன்.

குடை இல்லை என்பதற்காக
பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள்
நான் குண்டு மழைக்குள்ளும்
பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன்.

நீங்கள் காகிதத்தில் செய்த
ரொக்கேற்றுகளைத்தான்
வகுப்பறையில் பறக்கவிட்டு
இருப்பீர்கள்

நான் குண்டு விமானங்கள்
சுற்ற சுற்ற படித்திருக்கிறேன்.

நீங்கள் கொடுத்து
வைத்தவர்கள்
என்னைப்போல் அயுத வெடிசத்தத்தில்
உயிர்மெய் எழுத்தை படித்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
அழகான பாதணிகளோடு
பள்ளிசென்று இருப்பீர்கள்

என்னைப்போல் கண்ணிவெடியில்
கால் இழந்த பின்னும் சென்று
இருக்கமாட்டீர்கள்.

இவையெல்லாம் என்
பெருமையாக தெரியலாம்
இவையால்த்தான் தொடர்ந்து
படிக்காமல் போனேன் என்பது
யாருக்கு தெரியும்......?


-யாழ்_அகத்தியன்

Tuesday, October 9, 2007

நான் கிறுக்கன்தான்...!

என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல்
இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்.

என் கவிதைகளில்
எழுத்துப்பிழைகள்
அதிகம் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு நான்
உன்னைப்போல்
படித்தமேதையல்ல.

என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் நான் எழுத நினைப்பது
ஒன்று எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் உன்னை காயப்படுத்தக்
கூடாதுஎன்பதால்தான்.


என் கவிதைகள் எதுவுமே நீ
வாழ்த்த தகுதியற்றனவாக
இருக்கலாம்

இதையும்
ஏற்றுக்கொள்கிறேன்

உன்னால்
கிறுக்கனானேன்
என்பதால்


-யாழ்_அகத்தியன்

மூச்சே என் முயற்சி...!

உயிர்கள் அற்ற உடல்களோடு
உறங்கி இருக்கிறேன்

பிணங்கள் எரியும் வெளிச்சத்தில்
நிலாரொட்டி உண்டிருக்கிறேன்

குண்டு மழைக்குள்ளும் குடையோடு
இடம்பெயர்ந்திருக்கிறேன்

அசைக்கமுடியாத
ஆணிவேரின் உச்சியிலிருந்து
சுனாமியால் தப்பியிருக்கிறேன்

இருபத்தி நான்கு மாதங்கள்
இருட்டறையில் சிவராத்திரி
மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன்

பெயர் தெரியாத பனிமலை தேசத்தில்
பிணமாய் உருண்டிருக்கிறேன்

கைப்பாசை உதவியோடு ஐந்துநாள்
பட்டினியை பிச்சை எடுத்து
முடித்திருக்கிறேன்

விழுந்தால் மீனுக்கு நான்
பாய்ந்தால் எனக்கு நான்
தெரிந்தும் கப்பல்விட்டு
கப்பல் பாய்ந்திருக்கிறேன்

ஆனால்.....
என்னை மூச்சுவிட்டுக் கொண்டே
முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால்

மூச்சு விட்டுக் கொண்டே
இறந்துபோவேன் நான்.


-யாழ்_அகத்தியன்

Monday, October 8, 2007

என் நிலா நீ*

நிலா....
நீ வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருந்தேன்

நீ வரவேயில்லை
இன்னும் விடியவில்லை
எனக்கு.

*
நீ
இல்லாத இரவில்
பகலால் வாடுகிறேன்

நீ
இருக்கும் இரவில்
உனக்காய் பாடுகிறேன்.

*
உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே

உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே

*
முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல

*
துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு

இரவில் நீ இருக்கும்போது
பிறக்கும் கவிதை போல.

*
நிலவே....
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம்
கடன்வாங்கி ஒளிவீசுவதால்


-யாழ்_அகத்தியன்

மனமே மனமே..!

மனதார உனை நினைத்து
மறக்காமல் உனக்காக மூச்சு
விடும் ஜிவன் நான்.

தினம் தினம் உனை மறக்கப்
பார்த்து கண்ணீரால் கரைந்து
போனாலும் உனை நினைத்தே
உயிர்பெறுகிறேன் நான்.

உன்
நினைவுகளால் நினைவுக்
கடலில் நீந்தினாலும்
உனை மறக்க முடியாமல்
மூழ்கித்தான் போகிறேன்
பலமுறை தரையில் நான்.

நீ
கற்றுக் கொடுத்த
எல்லாவற்றையும்
மறந்துவிட்டேன்
உன் விம்பத்தை
மறக்கப் போய்

மறப்பது எப்படி
என்பதையும் நான்.

தினசரி
திரையிட்டு பார்பதுண்டு
உன் முதல் நாளில் இருந்து
உன் இறுதி நாள் வரையான
நம்ப முடியாத உன் நடிப்புகளை
கண்ணிரை ஓடவிட்டு நான்.

உன்னை சுலபமாக காதலித்ததைவிட
உன்னிடம் காதலை சொல்ல எவ்வளவு
கஷ்ரப்பட்டேனோ....

அதே போல்தான்
உன்னை நினைப்பதைவிட
உன்னை மறக்கவும்............-


யாழ்_அகத்தியன்

Sunday, October 7, 2007

இமையானவளே...!

உன் வீட்டில் யாருக்கும்
கவிதைபிடிக்காதா..?

பார்...
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று

*
நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

*
உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை

இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என் கவிதை
போல

*
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா
கனவிலாவாது
ஒன்றாவோம்

*
உன் இரு வரி
உதடுகள்
ஒனறு சேர்ந்து
பேசும்
மிக அழகான
ஒரு சொல்
கவிதை "ம்"


-யாழ்_அகத்தியன்

Friday, October 5, 2007

காதலிக்கும் தேவதை!!!

உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

*
நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே உன்
நிழலாக

*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

*
நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்

பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

*
நீ
என்னைக் காதலிக்கிறாய்
என்பதை என்னால் நம்ப
முடியாமல் இருக்கிறது

பொறுக்கியை எப்பிடி
தேவதை காதலிக்கும்..?

-யாழ்_அகத்தியன்

Thursday, October 4, 2007

உயிரானவளே!!!

வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.

*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்

*
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்

*
உனை மாதத்தில் மூன்று
நாட்களில் என் மடியில்
தாலாட்டியதுதான் ஞாபகம்
வருகிறது தாய்மார்களை
காணுகையில்

*
வானவில்லாய் நீ வந்து
போனாலும் வானமாய்
காத்திருக்கும் என்
கவிதைகள் எப்போதும்
உனக்காக


-யாழ்_அகத்தியன்

Wednesday, October 3, 2007

அவள் யாரோ !!!

அன்று
உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்

இன்று
யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று

*
நீ
எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு

"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்

இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?

*
தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு

உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை

*
தினமும்
நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்

உன்னால்
வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்

*
நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு

-யாழ்_அகத்தியன்

Tuesday, October 2, 2007

என் கண்ணீரில் நீ!!!

எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்

*
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன்

அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்

*
நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க

*
என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை

*

நீ பிரிந்தும்
சேவை செய்கிறாய்
என் கவிதைகளால்
பல காதலர்களை
சேர்த்து வைக்கிறாயே


-யாழ்_அகத்தியன்

Monday, October 1, 2007

நானறிவேன் உனை!!!

ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்

இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா

இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்


-யாழ்_அகத்தியன்