Sunday, August 26, 2007

கவியானவளே...[11]

சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டிய
பின்னும் தூறும் துளிகள்
எனக்கு

*
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன் கவிஞனாய்....

*
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை

*
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய் நீ
சிரிக்காத போதும் சிரிக்க

*
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்

*
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு

-யாழ்_அகத்தியன்


கைதியாய் நான்

என்னை அழகாய் எற்றிவிட்டாள்
குற்றவாளிக் கூண்டில் அனுபவிக்கிறேன்
அவள் எனக்கு செய்த குற்றத்துக்கும்
சேர்த்து தண்டனையை

-யாழ்_அகத்தியன்

பிடிவாதம்

நீ அனுப்பும் மின்னஞ்சல் கூட
உன்னைப் போல் மெதுவாகத்தான்
வருகிறது பிடிவாததோடு வருவதால்

-யாழ்_அகத்தியன்