நீ சிரிக்க மறந்த உன் புகைப்படம்
மீது ஒரு கவிதை எழுதினேன் என்ன
அதிசயம்உன் கன்னக் குழிக்குள்ளே
காணாமல் போனதுஎன் கவிதை
*
தினம் ஒரு கவி எழுதி உன்னைத்
தேட விட்டேன் எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான் தேடித்தருகிறது
*
மது போதையிலும் எழுதி முடித்தேன்
உன் பெயரை தலைகிழாக என் கவிதையாய்
*
என் கவிதைகள் எல்லாமே எழுதிய
என்னை விசாரிக்க வைப்பதைவிட
உன்னைத்தான் அதிகம் விசாரிக்க வைக்கிறது
*
எனக்கு பிறக்கும் கவிதைகள் எல்லாத்தையும்
நீ வாழவைக்க ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு கூட்டிச்செல்
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment