உன் கண்களில் மிதக்க
ஆசைபட்டு மூழ்கிப்போனது
யார் யாரோ கண்களில்
என் கவிதைகள்
*
என்னைக் காட்டிக் கொடுப்பவன்தான்
தூரோகி என்றால் என்னவளைக்
காட்டிக்கொடுக்கும் என் கண்களை
யார் என்பேன்
*
நீ அழகாய் கிழித்தெறிவதை
ரசிப்பதற்காகவே அழகான
கவிதைகளாய் எழுதிக்கொண்டு
வருகிறேன்
*
சாண் ஏற முழம் சறுக்கிறது
உன் வீட்டு வாசல் படி எனக்கு
*
என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல்
போனது நீ என்னை மறந்ததை நான்
இன்னும் நம்பவில்லை
*
அவளைச் சிரிக்கவைத்து அழாமல்
எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு
புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப்
புகைப்படத்தை
*
உன் வீட்டுச் சுவரில் எனக்கு
யாரோ எழுதிய இரங்கல் கவிதை
இன்னும் இறக்காமல் வாழ்கிறது
நீ வாசிக்க மறந்ததால்
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment