இனியவளே…
உன்னோடு பேசிவிட்டு கனவு
காண்கிறது என் கைபேசி
நானோ பேசிக்கொண்டே
தானிருக்கிறேன் இன்னும்
உன்னோடு பேசுவதாய் நினைத்து
**************************************
பகலில் சந்தித்தால் திரும்பி திரும்பிபாக்கிறாய்
இரவில் சந்தித்தால் என்னையே பாக்கிறாய்
அவ்வளவு மரியாதையா உன் நிழல் மீது உனக்கு
**************************************
மது அருந்திவிட்டு கார் ஓடக்கூடாதாமே
எங்கே உன் கைக்குட்டையை கொடு
சந்தியில் பொலிஸ் நிக்கிறான் என்
உதட்டில் உன் எச்சிலைப் பார்தால்
பிடித்து விடுவான்
**************************************
என்புத்தகத்தினுல்உறங்கும் என் பேனா
போல் உறங்கிகிறேன் உனக்காய்
கவிதைஎழுதுவதாய்கனவு கண்டபடி.
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment