Tuesday, May 8, 2007

என் காதல் கவிதைகள்

உன் தோழியின் கல்யாண வீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த உன்னைப்
பார்த்தபின்தான் எனக்கும் ஆசை
வந்ததுதாலி கட்டி கல்யாணம் செய்ய

*
உன்னோடு கூடவர ஆசையின்றி

விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

*
நான் முதல்த் தடவை பயணித்த

விமானத்தில்த்தான் உன் நினைவுகளை
தரையிறக்கிவிட்டு முதன் முதல் உன்னை
கனவு காண ஆரம்பித்தேன்

*
வருசையில் நின்று வாங்கப் போன

மருந்துக்கடையில்தான் வாங்கி வந்தேன்
மருந்தே இல்லாத காதல் நோயை

*
உன்னை பலமுறை சந்தித்த போதும்

என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான் எனக்கு
உதவி செய்து உறுதிப்படுத்தியது உன்
கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

*
தன் பெயரை பிழையாக எழுதிக்

கொண்டிருந்த சிறுமியிடம் அழகாய் எ
ழுத கற்றுக் கொடுத்தேன் என் காதலியின்
பெயரும் அது என்பதால்

-யாழ்_அகத்தியன்

1 comment:

rahini said...

உன்னை பலமுறை சந்தித்த போதும்
என்னால் உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான் எனக்கு
உதவி செய்து உறுதிப்படுத்தியது உன்
கைபேசி நீ ஊமையானவள் அல்ல என்று

nalla varigal