நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே
இருக்கிறது இன்னும்
என்னோடு உன் கண்கள்
*
இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று
*
உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான்
கொடுக்கும்போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?
*
நல்ல காலம் உன் கண் பேசும் வார்த்தைகள்
யாருக்கும் புரிவதில்லை இல்லையேல் திட்டும்
போதும் நான் சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்
*
உனக்கான கவி நடையில்தான் என்
எழுத்துக்கள் இடையில் கிறுக்கல் ஆகிறது
*
தயவு செய்து கோவத்தோடு எனை
விட்டு பிரியாதே என் கோவத்தை
யாரிடமாவது காட்ட வேண்டி வந்துவிடும்
*
நம் முதல் சந்திப்பில் காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்காதல் வந்தது
*
இன்று காதலர்தினமாம் யாரையாவது
காதலிக்க விடுகிறாயா நேற்றே வந்து விட்டாய்
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment