இனியவளே…
என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா
உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி
தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று
***********************************
நமக்குள் பிரிவே வரக்கூடாது
அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது
ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக
நீ இருந்துவிட கூடாதென்பதால்
***********************************
உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான்
யோசித்தேன் எப்படிநுழைவதென்று
நுழைந்தபின் மறந்தேபோனேன்
எப்படி யோசித்து நுழைந்தேனென்று
***********************************
கவிதைகள் எழுதத்தெரியுமா
என்று கேட்டார்கள்
நான் தெரியாது
என்றேன்.
அப்ப என்ன தெரியுமென்று
கேட்டார்கள்
கவிதை ஒன்று
தெரியுமென்றேன்.
எங்கே சொல் என்றார்கள்
உன் பெயரைச்
சொல்லி முடித்தேன்.
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment