நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம்
நமக்குள் சமாதான ஒப்பந்தம்செய்து கொள்வோம்
அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா
என்று பாப்பம்
*
நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே
*
என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது
*
மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ
*
கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment