Monday, May 7, 2007

இனியவளே…! [1]

உன் ஒவ்வொரு சந்திப்பின் போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது.

*
உன்னை நினைத்துக் கொண்டு

என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்

*
உன்னை பார்க்க கவிதையோடுதான்

தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்

*
கண்டபடி வெளியில் சுத்தாதே

உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்.

-யாழ்_அகத்தியன்

No comments: