உன் ஒவ்வொரு சந்திப்பின் போதும்
காதல் என்னை மொழிபெயர்த்து
கவிதையாய் அழகுபடுத்தியது.
*
உன்னை நினைத்துக் கொண்டு
என்னைப் பார்தால் கண்ணாடியிலும்
நீதான் தெரிகிறாய்
*
உன்னை பார்க்க கவிதையோடுதான்
தினம் வருவேன் கண்டதும் மெளனமாய்
தலை குனிகிறேன்
*
கண்டபடி வெளியில் சுத்தாதே
உன்னில் விழிக்க எல்லாரும்
தவம் கிடக்கிறார்கள்.
-யாழ்_அகத்தியன்
Monday, May 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment