Friday, November 30, 2007

நிலையானவளே...!

என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்

உன்னைக் கண்டதும்
ஓடிப்போய் உன்னைத்
தொட்டுவிட்டு திரும்பி
வராததுதான்

*
கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்து
விடுகிறாய் நீ

விடை பெற்றுப்
போகும் கடைசி நாள்
மாணவன் போல்

வீடு செல்ல
மனமில்லாமல் நான்

*

நம் காதலுக்கு முதல்
எதிரி நேரம்தான்

பார்
நாம் சேர்ந்திருக்கும் போது
மட்டும்தான் போட்டி போட்டு
ஓடுகிறது

*

உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா

ஒரு நிமிடம் நீ
இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்

சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்

*

என் கைகளுக்கு இதுவும்
தேவை இன்னும் தேவை

என்னை எதுவும் கேக்காமலே
உன்னை அணைத்து பழகிவிட்டு

நீ தூரம் இருக்கிறாய் என்று
தெரியாமல் தேடிக் களைக்கிறது


-யாழ்_அகத்தியன்

Monday, November 26, 2007

என் பாடல்......[06]

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே

எனக்கென எனக்கென உன்னைப் படைக்க
அடி உனக்கு முன் உனக்கு முன் நான்
பிறந்தேனே உந்தன் விழிப் பார்வைக்குள்
நான் வாழ அடி எந்தன் உலகமே நீயென
வந்தாயோ

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி உந்தன் வரவே இல்லையென்றால் அட
எந்தன் வாழ்வுக்கேது பகலே அடி நீயும்
என்னைக் கழித்திருந்தால் என்னை யாரு
யாரு சிலை செய்வார்

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

அடி எந்தன் கவிதை யார் தந்தது இதுவரை
யாருக்கும் சொன்னதில்லையே எல்லாமே
எல்லாமே நீ தந்தது உந்தன் பெயரே
உந்தன் பெயரே என் முதல் கவியானதிங்கே

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....

இன்னும் இன்னும் நான் என்ன சொல்ல
உந்தன் பக்தன் நான் தானே வேறு என்ன
என்னைக் கொஞ்சம் என்னைக் கொஞ்சம்
நம்பிவிடு நா உனக்கென உனக்கென
வாழவிடு உந்தன் மடியே போதுமே
நான் தூங்க

அடியே என் சொர்கமே நீதானே
என் நிலவே என்னை மட்டும்
காதல் செய்துவிடு

முதல் தரம் முதல் தரம் உன்னைப் பார்த்தது
என் மனதினில் மனதினில் இன்னும் நிற்கிது
உன் கண்கள் இரண்டும் பேசிய கவிதைகள்
என் இதயத்தில் பக்கமானதே....


-யாழ்_அகத்தியன்

Saturday, November 24, 2007

அருமையானவளே...!

நீ
என்னைத் தேடி
வருகிறாய்

நான்
நீயாக மாறி
என்னைத் தேடுகிறேன்

*

நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்

தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்

*
நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்

என்பதை
ரசிப்பதற்காகவே

நான் தொலைந்து
போகலாம்

*
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா

என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்

கைகூப்பி
வணக்கம் சொல்லி

*
உன்
தாவணிக்கு
எப்போது

என் தாயின்
கைவிரல்கள்
முளைத்தது

தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே


-யாழ்_அகத்தியன்

Friday, November 23, 2007

என் பாடல்......[05]

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

சொந்தமென யாருமில்ல
சொல்லிக் கொள்ள ஏதுமில்ல
என் சொர்கமே உன்னைவிட
ஏது வில(விலை)

பட்டப்படிப்பு படித்ததில்ல
பட்டதெல்லாம் அனுபவமே
பாவியாய் நினைத்தெனை
உன் நிழலாயெனும் கூட்டிபோ

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே

தேடாத வார்தையென நானிருந்தேன்
தேடியே உனைத் தேர்ந்தெடுத்தேன்
நீயும் எனை விட்டு வைத்தால் எனை
யார் வாசிப்பார்

கலைந்து கிடக்கிறேன் எழுத்துகளாய்
என்னை கொஞ்சம் சேர்த்து வை உந்தன்
கவிதைக்கு வார்தையாகும் வரம் கொடு

என் இதயமோ உன்னிடம்
காதலோ என்னிடம் ஏனோ
நீ வானிடம் வாராயோ கை
சேரயோ வான் நிலவே....


-யாழ்_அகத்தியன்

இம்சையானவளே...!

உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள் உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே

*
அந்த சூரியனுக்கு
யார் என்னைக்
காட்டிக்கொடுத்தது

பாருங்கள்
நிலாவுக்காக
காத்திருக்கிறேன்
என்ற கோவத்தில்
என்னை கறுப்பாக்கி
கொண்டிருக்கிறது

*

உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
நி
ன்
று
பார்
உன்னைப் பெற
என்னை நான்
இழந்த வலி புரியும்

*
தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்

*
" நிலா" என்று யார்
உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

Thursday, November 22, 2007

என் பாடல்......[04]

காதல் நிலவே
கவிதையாவோமா நீயே
என் கனவே காதலி

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள் திறக்கையில்
உன்னையே காண்கிறேன் நா நா

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
மெளனமாய் தொடர்கிறாய் உன்
சம்மதமே வேண்டி என் இதயம்
துடிப்பது கேக்கலையா மலரே உன்
இதழ் பிரித்து காதலை சொல்லிவிடு
என்னை உன்னோடு சேரவிடு காதலியே

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

எந்தன் உலகமே நீயடி எனக்கென
யாரடி உன்னை விட்ட ஏதடி வாழ்க்கை
எல்லாமேயானாய் இனியுமென்ன கேள்வி
உன் பதிலே நான்தானே காதலி என் உலகமே
வா இமைகளாய் காத்திடுவேனே

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

எனக்கென நீயும் உனக்கென நானும்
வாழ்ந்து ரசித்திடுவோமே எம்மை பிரிக்க
ஏது சக்தி காதல் ஒன்றே போதுமடி கவலை
எதற்கு கண்ணே காலம் கை கொடுக்கும்
கடவுளை நம்பி எனை ஏற்றுவிடு நிலவே
உந்தன் வானாமாய் நானிருப்பேனே என்றும்

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி

இதயம் மலர்கையில் இதமாய்
சிவக்கிறேன் நா இமைகள் திறக்கையில்
உன்னையே காண்கிறேன் நா நா

காதல் நிலவே கவிதையாவோமா
நீயே என் கனவே காதலி....


-யாழ்_அகத்தியன்

Monday, November 19, 2007

மென்மையானவளே..!

என் இதயம்
மென்மையானது
அதனால்தான் நான்
எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை

அப்படிப்பட்ட என்
இதயத்தை கைப்பற்றி
என்னை எதுவுமே
செய்யாமல் பண்ணிவிட்டாய்

*
உன் விழிவீச்சு
படும்வரை அமாவாசை
இரவுக்குள் மறைந்து
கிடக்கின்றன
என் கவிதைகள்

*
நீ மட்டும்தான்
சிறந்த நீதிபதி நான்
எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்


*

உனக்கு எதை வாங்கி
வருவது என்ற குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து பார்க்கையில்
கையில் இருந்தது மட்டும்
சிரித்துக் கொண்டிருந்தது

கடையில் இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

*
நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது

-யாழ்_அகத்தியன்

Thursday, November 15, 2007

சாந்தமானவளே..!

என் காதலா உன் காதலா
பெரிதின்னு பார்பதற்காகவாவது
நாமிருவரும் காதலிக்க வேண்டும்
உன்னிடம் நான் தோற்றுப் போனாலும்
பரவாயில்லை

*

நீ என்னை இயக்க ஆரம்பித்தாய்
இதயம் தன் பொறுப்பு பறிபோனதே
தெரியாமல் துடிக்க மட்டுமே செய்கிறது

*

நீ எனக்கு கிடைத்தமைக்கு
அமைதியாய் நன்றி சொல்லி
வழிபடத் தொடங்கினேன்

எனக்கு மட்டும் கேக்கும்படியாய்
என் மனசு இறைவனை திட்ட
ஆரம்பித்தது

தாமதமாய் உன்னை எனக்கு
காட்டியமைக்காக

*

என் புகைப்படத்தை எதற்காக
எல்லாரிடமும் காட்டுகிறாய் என்று
கோவப்படுகிறாய்

அப்போதுதான் என் இதயம்
எனக்குள் இருப்பதற்காய்
கவலைப்பட்டேன்

*

"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்


-யாழ்_அகத்தியன்

Tuesday, November 13, 2007

இதமானவளே..!

"நான்"
நீயாகவில்லை உன்
பக்தனாகத்தான் நான்

ஏனெனில்
உன் முதல் சந்திப்பிலேயே
"நான்" என்ற என் அகங்காரம்
என்னைவிட்டு பறந்து போய்விட்டது

*
காதலிக்கும்
இதயங்கள்தான்
என்றும் இளமையாக
இருக்குமாம் வா

நம் முதுமையில்
நமக்கென யாரும்
இல்லாமல் போனாலும்

நம் இதயங்களின்
குறும்புகளை சேர்ந்தே
ரசித்திடுவோம்

*
அழகாக பூத்திருக்கும்
பூச்செடிகளைக் கண்டு நீ
ஆனந்தப்பட்டபோதுதான்

முதன் முதலாக நான்
கண்காணிக்காததால்

வாடிப்போன
பூச்செடிகளுக்காய்
கவலைப்பட்டேன்

*
உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்

நீ சூடும்
பூக்களைப்போல்

உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக் கேட்பேன்

*
என் கவிதைகளை நீ
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்

நான் மனம் வைத்துத்தான்
ஒவ்வொரு கவிதையையும்
எழுதுகிறேன் என்ற உண்மையை


-யாழ்_அகத்தியன்

Monday, November 12, 2007

என் உயிர் காதலியே..!

இனிமையான
உன் குரலால்
என் இதயம்
மெழுகாய்
உருகுவதில்

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தாயில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்

இதைவிட
சின்னச் சின்ன
குறும்புகளில்

செல்லச் ச
ண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடித் திரியும்
பொழுதுகளில்

இடைவெளியில்லா
உன் நினைவுகளில்.....

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதையில்லை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்


-யாழ்_அகத்தியன்

Sunday, November 11, 2007

எங்கிருந்தாய் இதுவரை நீ..!

அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

இரவுகள் என்னை தலாட்ட
மறுக்கிறது இரு விழிகளும்
சூரியனாய் சுட்டெரித்து உன்
நினைவுகளை படரவிடுகிறது

உன்னோடு இருக்கையில்
மெளனமே மொழியாகிறது
தனியாய் இருக்கையில்
ஏதேதோ பிசத்துவதே
என் மொழியாகிறது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதிதாய் யாரோ
குடிவந்ததாய் உண்ர்கிறேன்

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்
அன்பே தனியாய் உன் நினைவுகளை
திரையிட்டு உள்ளுக்குள் சிரித்து ரசிக்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்ப்பதறியாமல்
குழந்தைகளோடு குழந்தையாகி
கும்மாளமடிக்கிறேன்

இப்போது உனக்காக
காத்திருக்கும் நேரமிது

கொஞ்ச நேரம் நிற்கிறேன்
கொஞ்ச நேரம் இருக்கிறேன்
கொஞ்ச நேரம் சாய்கிறேன்
கொஞ்ச நேரம் நடக்கிறேன்
கொஞ்ச நேரம் கவி எழுதுகிறேன்

மீதி நேரம் இருந்தால்
செய்ததையே திருப்பிச்
செய்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேன் என்று தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
கவிதை எழுதும் போது
காகிதங்களை காயப்படுத்துவதாய்
உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்


-யாழ்_அகத்தியன்

Saturday, November 10, 2007

இரக்கமானவளே..!

உனக்கென்ன நீ தூங்கிவிட்டாய்
நான்தான் நீ தூங்கும் அழகை
கற்பனை பண்ணிப்பார்த்தே

என் இரவை நீளமாக்கிக்
கொண்டிருக்கிறேன்

*அப்படி என்னத்த உன்னில்
கண்டதோ என் இதயம்
உனக்கு பதிலாய் எதைக்
கொடுத்தாலும் என் மேல்
தூக்கி எறிகிறது

*
கவிதைகளை
நான் பெற்றதில்
பதிலுக்கு கவிதைகள்
செய்த நன்றிக்கடன்

உன்னை எனக்கு
தேடித்தந்ததுதான்

*

தூங்குவதற்கு இமை
மூட வேண்டும் என்பதையே
மறக்கடிக்கிறது உந்தன் நினைவு

*
என் வேதனை எல்லாமே
உன்னைக் காதலிக்க எனக்கு
ஒரு இதயம் போதாது
என்பதுதான்

-யாழ்_அகத்தியன்

நிலா பாட்டு

வா நிலா வா நிலா வசந்தம் தா நிலா
நீ நிலா நினைவுகள் தா நிலா பார் நிலா
உன் பார்வையின்றி தேய்வது நான் நிலா

உனைத் தேடியே என்
கண்கள் பூத்ததோ தேன் நிலா
எனைத் தேடமலே நீயும் மறைவதேன்
பால் நிலா

எங்கே நீ சென்றாலும் என் நிலா
நீ நிலா நீயில்லா என் வானம்
அது விதவையின் நெற்றி நிலா
நீயில்லா நான் யாருமில்லா
குழந்தை நிலா

இமைத்திடும் கண்களில் தெரிவது நீ நிலா
துடிக்கும் இதயத்தில் வசிப்பது நீ நிலா
எழுதிடும் கவிதையில் மொழியும் நீ நிலா

நிலா நிலா நீயே என் சொந்த நிலா
காதலை இருவரும் சொன்ன நாள்
இன்றல்லவோ வா நிலா
வாழ்வோம் ஒன்றாய் வானம்
உள்ளவரை சேர்ந்தே.....


-யாழ்_அகத்தியன்

Thursday, November 8, 2007

என் பாடல்......[03]

எங்கிருந்தாய் இதுவரை நீ
உன்னைத் தேடித்தானே என்
கண்கள் களைத்தது நீயும் கொஞ்சம்
என்னைத் தேடியிருந்தால் எப்போதோ
எப்போதோ சேர்ந்திருப்போமே

உன்னைக் காட்டி கொடுத்த கண்கள்
காதலை கற்றுக் கொடுக்கிறதோ கவிதை
தான எழுதுறேனோ இமைத்திடும் பொழுதினில்
எனை மறந்து பார்க்கிறேனோ உன் பார்வை ஒன்று
போதுமே நீ அணைத்திடும் குழந்தையாவேனே

விடியும் பொழுதில் நீ கிறுக்கும்
கவிக்கோலம் ரசித்திட விழித்துடுவேனே
மாலைப் பொழுதில் நீ பாடும் தாலட்டை
கேட்டே என் இமை மூடுமே

உன் பார்வையின் தொலைவிலே தொலைந்திடாமல்
வாழ்ந்திட வரம் கேட்பேன் என் உறக்கத்தில் கூட
உன் இதயம் துடிக்கும் சத்தம் கேட்க தவமிருப்பேன்
நீ சூடும் பூவிலும் நானிருக்க பூத்திருப்பேன்

எனக்கும் உனக்குமான உலகம் படைத்து நாம்
கையோடு கை பிடித்தபடி சுற்றித் திரிய வேண்டும்
காதலர்பூமியென பெயர்வைத்து தினம் கவிதைகள்
படைத்து ரசித்திடுவோமா


-யாழ்_அகத்தியன்

Wednesday, November 7, 2007

தித்திக்கும் தீபாவளி..!

ஒட்டுமொத்த விளக்கையும்
ஒரே நேரத்தில் ஏற்றிவிட்டு
அழகு பார்க்கிறாய்

விளக்குகளோ நீ ஏற்றிய
சந்தோசத்தில் அணையப்போவது
கூடத் தெரியாமல் அழகாய்
எரிந்துகொண்டிருக்கிறது

*

நீ ஏற்றிய விளக்குகளில் எல்லாரும்
குளிர் காய்கிறார்கள் நான் மட்டும்
உன் இருவிழிப்பார்வையால் எரிந்து
கொண்டிருக்கிறேன்

*
பட்டாசே உன்னைக்
கொளுத்தி வீசுவதால்

வெடிக்காமல்
விட்டுவிடாதே

உன் ஒவ்வொரு
விரச்சாவிலும்தான்

என்னவள் என்னை
இறுக்கிப் பிடிக்கிறாள்

*
உன் கையில் இருக்கும்
விளக்கை நான் ஏற்றும்
வரை தெரியாது

சுட்டெரிக்கும் உன் கண்களால்
சுடாமலும் இதமாக பார்க்கத்
தெரியும் என்பதை

*
"தீபாவளி வாழ்த்துக்கள்"
என நீ அனுப்பிய குறுந்தகவலை
பாடமாக்கியபடியே விடியவைத்தேன்
என் தீபாவளியை

*
நீ
விளக்குகளை ஏற்ற
ஆரம்பித்தாய் இரவுகள்
தீபாவளி கொண்டாடத்
தொடங்கிவிட்டது

*
ஒரேயொரு முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று

உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே


-யாழ்_அகத்தியன்

Monday, November 5, 2007

என் பாடல்......[02]

கொஞ்சிவிடு கொஞ்சிவிடு கொஞ்சவென
கெஞ்சவிடு நித்தமினி நித்தமினி நித்திரையை
கெடுத்திடு விடியட்டும் விடியட்டும் விளக்கை நீ
அணைத்திடு

மழைக்கும் நான் பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்ல
படிக்கிற வயதெல்லாம் கடந்திட்டு பிள்ளை
கனமழை பெய்யுது கட்டில் மெத்தை இருக்கிது
செய்முறை பலமுறை செய்திடவா நீ திருத்திட
திருத்திட தப்பு பண்ணவா வா வா வா

தூர தூர தூர தேசம் இன்னும் நான் நடந்ததேயில்ல
வழிவிடு வழிவிடு மெல்ல உன் தேகமெங்கும் தேகமெங்கும்
இதழ்களால் பொடி நட நடக்கிறேன் பாரு எந்தவழி
போனாலும் வழி காட்டியில்ல கை எடு கை எடு
கண்டு பிடிக்க

புள்ளி புள்ளி புள்ளிவைத்து கோலம் நான் போட்டதே இல்ல
கொஞ்சம்விடு கொஞ்சம்விடு புள்ளியின்றி நானும் உன் தேகமெங்கும் மீசையால் கோலம்தான் போடுறேன் பாரு பொறுத்திரு பொறுத்திரு கோழி மிதித்து கொஞ்சுதான் செத்ததில்ல மீசை குத்தி யாரும்தான் காயப்பட்டதில்ல

ஏய் ஏய் ஏய் மது மது போதையில் நானும் மயங்கியதில்ல
மண்ணோடு மண்ணாய் உன்னோடு நானும். தெளியவேயில்ல
தெளிந்திட மனசும்வரல இப்படியே தொடர்ந்திரு இதுவர
விட்டதில்ல இப்படி பெரு மூச்சு

மானே மயிலா மல்லிகைப்பூத் தேனே
என்ன சுகம் என்ன சுகம் ரொம்பத்தான்
இனிக்கிது கெஞ்சத்தான் வைக்கிது
மறுபடி கேக்கிது வா வா வா
வாரே வா வா வா வா செல்லம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


-யாழ்_அகத்தியன்

Sunday, November 4, 2007

என் பாடல்......[01]

காதல் வந்தால் கவிவந்தால்
மிக அழகு இரவு வந்தால் நிலவு
பூத்தால் பேரழகு நீ வந்தால்
உன் நினைவிருந்தால் கோடியழகு

மலரும் பூ முகமே
உன் கண்கள் இமைத்தால்
உன் இதழ்கள் பிரிந்தால்
என் காயமாறுமே கண்ணே

கொஞ்சிடும் உலகமிது கெஞ்சிடும்
இதழ் எனக்கு பக்கம் வந்துவிடு
பாவையே முத்தமிடு பாத்திருக்க
கொள்ளையிடு பள்ளியறை நேரமிது
படித்திட வா.... படிப்பிக்க வா..

அழகானா இரவிருக்கு ஆசையோடு
நானிருக்கு அள்ளிஎடு அத்தனையும்
பிச்செடு மூச்சுவிடு முகம் காட்டு
முத்தசுகம்தேடு முழுமையாய் ஏந்திவிடு
எனக்கென நீயிரு

விட்டது தொட்டது விடாதே
எட்டியதேது தட்டிக்கொடு எல்லாம்
கனிந்திருக்கு மெதுவா பறித்தெடு
கண்ணே கனியே களைக்காமல்
முத்தமிடு ஏ குயிலே மயங்குமிசை கேள்

எடுத்திட வா கொடுத்திட வா பெற்றிடவா
வா வா உச்சிமுதல் பாதம்வரை முத்தமிட்டு
நீந்தவா உன்னில் என்னை மூழ்கடிக்க வா வா

புதுப் புதுசாய் பூப்பது எந்தசுகம்
அடைமழை பெய்கிறது வா நிலா
நனைந்திடுவோம் புதுக்கவியாய்
இணைந்திடு போர்வைக்குள் புழுவாய்
நெழிந்துவிடு ஏ ஏ ஏ நானிருக்கேன்
நாணத்தை களைந்துவிடு நமக்கினி
யாரும் வேண்டா


-யாழ்_அகத்தியன்

என் வாசகி நீ..!

முதல் முதலாக
நீ என்னை எழுத்துக்கூட்டி
வாசித்து முடித்தபோது

எல்லாக் கவிதைகளைப்
போலவும் நானும் உன்
வாழ்த்துக்காய் காத்திருக்க
முன்னமே

"என்றும் நீ எனக்குப்
பிடித்த கவிதையாக
இருந்துவிட முடியாது
ஏனெனில்
எழுத்துப் பிழைகள்
அதிகம் நிறைந்த
கிறுக்கலாய் இருக்கிறாய்"

என நீ கூறிவிட்டு
என்னை கசக்கி
எறிந்த இடம்

இன்றும் என்னை
கண்ணீரால் கவி
எழுத வைக்கிறது


-யாழ்_அகத்தியன்

Saturday, November 3, 2007

உறவானவளே..!

நீ கவிதை என்றால்
நான் அதில் பொய்
நீ அழகாக தெரிவதற்காய்
உண்மைகளை சாகடிப்பேன்

*
கரப்பான்பூச்சியை
கண்டதும் நீ என்னைக்
கட்டிப் பிடித்தாய்

நான் கரப்பான்பூச்சிக்கும்
நன்றிக் கடனாளியாகிவிட்டேன்

*
வகுப்பாசிரியைக்கு உன்
மேல் பொறாமை படிப்பிக்கும்
தன்னைக் கவனிக்காமல் நான்
படிக்கும் உன்னைக் கவனிப்பதால்

*
பேசாமல்
எனக்கு நீ முத்தமிடு
இல்லையேல் ஏதாவது
பேசிவிடு

உன் இதழ்கள்
ஒன்றை ஒன்று
முத்தமிடுவதையாவது
நான் பார்த்துவிட்டுப் போகிறேன்

*
எல்லாரும் அழகுக்காக
பொட்டு வைப்பார்கள்

நீ மட்டும்தான் உன்
அழகில் யாரும்
கண்படக்கூடாது
என்பதற்காக
பொட்டு வைக்கிறாய்


-யாழ்_அகத்தியன்

Friday, November 2, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு என் வீரவணக்கம்

பூக்கள் கூட உன்னைப்
போல் புன்னகையால்
முகம் மலர்ந்ததில்லை

சமாதான புறா கூட
உன்னைப்போல் சமாதானம்
பேச உலகம் சுற்றியதில்லை

உலக பேச்சுவார்த்தை
மேசைகளுக்கே தமிழ்
கற்றுக்கொடுத்த சமாதான
புறா நீயல்லவா

உன்னோடு ஆயுதம்
குழந்தையாய்
உறங்கியபோதும்
அழகு தமிழ் சொல்லெடுத்து
செல்வன் நீ அற்புதமாய்
போராடினாயே

வழிகாட்டி பலகைகூட
காட்டிவிட்டு இருந்துவிடும்
தளபதியாய் நீ இருந்தபோதும்
கூடவே கைபிடித்து
கூட்டி வந்து விட்ட
தாயல்லவா நீ

தேசத்தின் குரலோடு
ஈழத்தின் விடிவிற்காய்
அகிலம் சுற்றி வந்த
ஈழத்தின் குயிலே

கூட்டைவிட்டு நீ
வாரக்கணக்கில் அல்லவா
உலகம் சுற்றி வந்தாய்

ஏன் ஏன்
எங்கள் கூட்டில்
இருந்தபடியே நீ
நிரந்தரமாய் உன் உயிரை
பறக்கவிட்டாய்

உன் கல்லறையில் நீ
தூங்க முன் நீ கண்ட
தமிழீழக்கனவு நிறைவேறும்
அதுவரை நீ தூங்காமல் இரு


-யாழ்_அகத்தியன்

Thursday, November 1, 2007

அமைதியானவளே..!

நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா

உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்

*
என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு செல்கிறாய்

எப்படியும்
நீ வீடும் சென்று படிக்கும்
போது காமக்கவிதையாய்
மாறியிருக்கும்

*
உனக்கு
பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா

உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்

*

உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்

நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்

*
உனக்கு காதல்
கதையே தெரியாதா

நீ சொன்ன கதைகள்
எதுவுமே என் காதலை
உன்னிடம் சொல்ல
உதவவில்லையே


-யாழ்_அகத்தியன்