தன்னை அணைக்காமல் உன்னை
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி
*
கால்களைக் காப்பாற்றித் தந்த எங்களை
கழட்டி விட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றச்சொல்லி
கோயிலுக்குள் பக்தகோடிகள்
*
கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு தேவைப்படும்
கவனம் என்பதை உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்
*
என் கவிதைத் திருடியை தாலி கொண்டு
சிறைப்பிடித்தேன் என் மனைவியாக
*
நான் எழுதிய கவிதை இல்லை
ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக்
கொண்டேன் உன் பெயரை
-யாழ்_அகத்தியன்
Thursday, May 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment