எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்.
*
உன்
கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்
*
அமாவாசையிலும் நிலாவோடு
வாழ்ந்து கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்
*
உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது
*
நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்
*
நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்
*
நீ
என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை எண்ணிப்பார்பதையே
நான் செய்து கொண்டிருக்கிறேன்
*
இன்று என்னைவிட்டு
விடைபெற்று போகிறாய்
நாளைய உனக்காக நான்
காத்திருக்க ஆரம்பிக்கிறேன்
*
நீ
எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக்கூடாது
என்பதில் மிகத் தெளிவாய்
இருக்கிறேன்.
*
உனக்கு
பொய் சொல்வது பிடிக்காது
தெரிந்தும் சொல்கிறேன்
பொய்சொல்லாத நீ கிடைக்க
வேண்டுமே எனக்கு
*
உன் புகைப்படத்தில் நீ
யாரோடு நிற்கிறாய் என்பதே
என் கண்ணுக்குத் தெரியவில்லை
என்
கண்ணுக்கு தெரிவது
நீ மட்டும்தானே
-யாழ்_அகத்தியன்
Saturday, October 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
ரொம்ப நல்லாயிருக்கு.
நிறைய எழுதுங்கள்.
பத்மா....
Post a Comment