Wednesday, October 31, 2007

அசத்தலானவளே..!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம்
உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன

அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்

*
உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ

*
குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாதுபாடு
படுவதுதான் என்னை
ரசிக்க வைக்கிறது

*
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்

*

நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகயழகு

அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு


-யாழ்_அகத்தியன்

No comments: