கனவு காண யாரும்
உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக
நீ
என்னை மட்டுமல்ல
என் உறக்கத்தையும்
சேர்த்துத்தான்
கலைத்துவிட்டாய்
மறுபடி நான்
உன்னை சந்திக்க
நேர்ந்தால்
என் உறக்கத்தையாவது
கெஞ்சிக் கேப்பேன்
மறுபடி நான்
தூங்கிப்போனால்
என் கனவில் உன்னையே
கெஞ்சி கேப்பேன்
-யாழ்_அகத்தியன்
Sunday, October 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment