Sunday, October 28, 2007

அழகானவளே..!

இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்

நீ
முகத்தை பொத்திய
பின் வெக்கப் படுவதையும்
நான் ரசிக்க வேண்டும்

*
பேசாமல் நான் சிவப்பு நிறத்தில்
பிறந்திருக்கலாம் இப்படி நீ முத்தம்
கொடுத்த (கடித்த) இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்

*
ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்

எப்படி...
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்

என்னை நானே கிள்ளிவிட்டு
நீ கிள்ளியதாய் பொய் சொல்கிறேனே

*
என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்

நீ
பார்க்காமல் போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது அதுதானே

*
நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று


-யாழ்_அகத்தியன்

No comments: