Wednesday, October 17, 2007

காதலான கவிதைகள்...!

நீ
என்னோடு வருகையில்
காற்று என்னைத் திட்டுகிறது
நீ
தனியாய் போகையில்
காற்றை நான் திட்டுகிறேன்

பார் காற்று புயலாய் மாறி
உன் ஆடை களைய முயற்சி
செய்வதை

*
பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
நடக்கையிலும் ஏதாவது ஒரு
முள் குத்திவிடுகிறது உன்
இதயத்தை ஞாபகப்படுத்த

*
இரவிலும் தூங்க விடாததுக்கும்
சேர்த்து பகலிலும் தூங்குகிறது
என் கைபேசி நீ என்னை
தொலைத்ததால்

*
உன்னைச் சுற்றுவதால் நீ
கிடைக்காமல் போனாலும்
உன் நினைவாவது கிடைக்குமே
அது போதும் எனக்கு நான்
யாரையும் சுற்றாமலிருக்க

*
உன்னில் நான் இல்லாத
இடத்துக்கு மேல இன்றும்
தொங்குகிறது என்
இதயச் சங்கிலி


-யாழ்_அகத்தியன்

No comments: