Tuesday, October 2, 2007

என் கண்ணீரில் நீ!!!

எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்

*
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன்

அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்

*
நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க

*
என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை

*

நீ பிரிந்தும்
சேவை செய்கிறாய்
என் கவிதைகளால்
பல காதலர்களை
சேர்த்து வைக்கிறாயே


-யாழ்_அகத்தியன்

No comments: