Friday, October 26, 2007

யார் குற்றமோ..!

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை
காதலோடு
பார்க்காமல்
போயிருந்தால்

நான் உன்னிடம்
நேரம் கேக்காமல்
போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து
ஒன்றுக்குள் ஒன்றாக
வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்


-யாழ்_அகத்தியன்

No comments: