Sunday, October 7, 2007

இமையானவளே...!

உன் வீட்டில் யாருக்கும்
கவிதைபிடிக்காதா..?

பார்...
உன்னை எப்பிடி
சத்தம் போட்டு
கூப்பிடினம் என்று

*
நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

*
உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை

இரு வரியானலும்
அதன் பொருள் நீயாக
இருக்கும் என் கவிதை
போல

*
நீ மேல் இமை
நான் கீழ் இமை
வா
கனவிலாவாது
ஒன்றாவோம்

*
உன் இரு வரி
உதடுகள்
ஒனறு சேர்ந்து
பேசும்
மிக அழகான
ஒரு சொல்
கவிதை "ம்"


-யாழ்_அகத்தியன்

No comments: