Tuesday, October 23, 2007

தாயுமானவளே..!

நீ வரும்வரை என்னை எவரும்
கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று எதுவும் இல்லை
அதற்காகவாவது உன்னோடு கூட
வரலாம் நான்

*
உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது

*
தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை தடவித்
தடவித்தான் என்னையே
நான் தூங்க வைக்கிறேன்

*
உன்னை நிற்க வைத்து யார்
புகைப்படம் எடுத்தது அதை
பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது

*
நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய் நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே


-யாழ்_அகத்தியன்

No comments: