எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
*
நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்
*
நீ
கவிதை
படிக்கிறாயா
இல்லை
உன்னைக்
கவிதை
படிக்கிறதா
பார் மறுபக்கம்
போக பஞ்சிப்படுவதை
*
உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது
இசைக்கும் உன் கால்
கொலுசு முதல்
*
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்
நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்
-யாழ்_அகத்தியன்
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment