Saturday, October 20, 2007

தேவதையானவளே..!

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

*
நீ
மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்

*
நீ
கவிதை
படிக்கிறாயா

இல்லை

உன்னைக்
கவிதை
படிக்கிறதா

பார் மறுபக்கம்
போக பஞ்சிப்படுவதை

*
உன்னைச் சேரும்
ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது

இசைக்கும் உன் கால்
கொலுசு முதல்

*
துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்

நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்


-யாழ்_அகத்தியன்

No comments: