Tuesday, October 16, 2007

பாடல்வரியாக கிறுக்கிப்பார்த்தேன்

ஒரு வார்த்தையேனும்
சொல்லாயோபெண்ணே
அதற்காகத்தானே நான்
வாழ்கிறேன்

நித்தம் உனை நினைத்தே
என் ஜீவன் துடிக்கிது பந்தம்
பாசம் எல்லாம் நீயே
பழகிட வா கண்ணே

நீயே எந்தன் உலகம்
நீயில்லாத உலகம் என்
கல்லறையல்லவா உயிரே
உன்னைச் சுமக்கத் தாயவேன்
உன் மடியில்என்றும்
குழந்தையாவேன்
நீயே என் சொந்தமல்லவா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

என் உயிராய் நீயிருந்தால்
உனக்காய்த் ( நான்)துடிப்பேன்
என்னுயிரே நீதானே
என் கவி நீயென்றால்
உனக்காய் ( நான்)சொல்லாவேன்
என் கவி நீதானே

என் கனவுகள் நீதானே இரவாய்
நீயிருந்தால் என் கற்பனை நீதானே
என் கவியாய் நீயிருந்தால் வா
பழகிட வா

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)

உனக்காய் வாழவே நான் பிறந்தேன்
என் இதயம் துடிப்பதே நீ வாழத்தானே
கடலுக்கு அலையிருக்கு
பூவுக்கு புயல் இருக்கு அன்பே
எனக்கென்று ஏதிருக்கு உன்னைவிட
யாருமில்லை உன்னைப் போல ஏதுமில்லை
வாழ்ந்திடுவோமே ஒன்றாக வா....

(ஒரு வார்த்தையேனும் சொல்லாயோ.....)


-யாழ்_அகத்தியன்

No comments: