Friday, October 5, 2007

காதலிக்கும் தேவதை!!!

உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்
உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

*
நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே உன்
நிழலாக

*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

*
நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்

பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

*
நீ
என்னைக் காதலிக்கிறாய்
என்பதை என்னால் நம்ப
முடியாமல் இருக்கிறது

பொறுக்கியை எப்பிடி
தேவதை காதலிக்கும்..?

-யாழ்_அகத்தியன்

No comments: