Monday, October 1, 2007

நானறிவேன் உனை!!!

ஏதாவது ஒரு கவிதை
எழுதிட வேண்டும் என்றுதான்
தினமும் பேனா தூக்குகிறேன்

இறுதியில்
எதையும் எழுதாமலே
விலகி விடுகிறது
என் பேனா

இரகசியாமாய் வந்து
என் கவி படித்துவிட்டு
விலகும் என்னவள் போல்


-யாழ்_அகத்தியன்

No comments: