7ம் ஆண்டு வகுப்பறை
மேசையில் முதல் முதலாக
கிறுக்க ஆரம்பித்தேன்
இன்றும் கிறுக்கிக்
கொண்டுதானிருக்கிறேன்
கண்ணில்படும்
கரும்பலகையிலும்
விளம்பர சுவர்களிலும்
பேருந்து இருக்கையிலும்
பிடித்த மரங்களிலும்
ரசித்த உலக
அதிசயங்களிலும்
கிடைக்கும் வெற்றுக்
காகிதங்களிலும்
உன் பெயரோடு
என் பெயரை
எனினும்
இன்றுவரை என் பெயர்
கிறுக்கலாகத்தான் தெரிகிறது
நான் கவிஞனான பிறகும்
ஆனாலும்
உன் பெயரே எனக்கு பிடித்த
கவிதையாகவே இன்றும் இருக்கிறது
-யாழ்_அகத்தியன்
Thursday, October 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment