Thursday, October 11, 2007

அகதியாய் நான்...[2]

அண்ணன்
புலம்பெயர்ந்த நாட்டில்
சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்

தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்

*
எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர

*
ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்

*
புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும்
என் குடும்பத்தின் பசியைத்தான்
போக்கமுடிந்தது தூங்கவைக்க
முடியவில்லை

*
புலத்தில் வயிறு முட்ட
உண்டாலும் வீசவில்லை
அம்மாவின் கைவாசம்

*
நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற

*
அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா என்றாலே இறக்கிறோம்


-யாழ்_அகத்தியன்

No comments: