Tuesday, October 9, 2007

நான் கிறுக்கன்தான்...!

என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல்
இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
அவையாவும் கற்பனைகள்
என்பதால்.

என் கவிதைகளில்
எழுத்துப்பிழைகள்
அதிகம் இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
மன்னித்துவிடு நான்
உன்னைப்போல்
படித்தமேதையல்ல.

என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்

ஏற்றுக்கொள்கிறேன்
உண்மைதான் நான் எழுத நினைப்பது
ஒன்று எழுதி முடிப்பது வேறொன்று
எல்லாம் உன்னை காயப்படுத்தக்
கூடாதுஎன்பதால்தான்.


என் கவிதைகள் எதுவுமே நீ
வாழ்த்த தகுதியற்றனவாக
இருக்கலாம்

இதையும்
ஏற்றுக்கொள்கிறேன்

உன்னால்
கிறுக்கனானேன்
என்பதால்


-யாழ்_அகத்தியன்

No comments: