Monday, October 22, 2007

இதயத்தில் நீ..!

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரானாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன்


-யாழ்_அகத்தியன்

No comments: