நிலா....
நீ வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருந்தேன்
நீ வரவேயில்லை
இன்னும் விடியவில்லை
எனக்கு.
*
நீ
இல்லாத இரவில்
பகலால் வாடுகிறேன்
நீ
இருக்கும் இரவில்
உனக்காய் பாடுகிறேன்.
*
உன்னைப் பாட பலர் இருந்தும்
உன்னைத் தேட நான் மட்டுமே
உன்னால் படிக்க பலர் இருக்கலாம்
உனக்காக வடிக்க நான் மட்டுமே
*
முட்கள் இல்லாத ரோஜாவை
எனக்கு பிடிக்காது நீயில்லாத
பகலைப் போல
*
துளைத்த புல்லாங்குழலில்தான்
இசை பிறக்கும் அது அழகு
இரவில் நீ இருக்கும்போது
பிறக்கும் கவிதை போல.
*
நிலவே....
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
நீ எனக்காக சூரியனிடம்
கடன்வாங்கி ஒளிவீசுவதால்
-யாழ்_அகத்தியன்
Monday, October 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
hey
kavithai mikavum nanru.
vazhthukkal
Post a Comment