Thursday, October 4, 2007

உயிரானவளே!!!

வாயாடியாய் இருந்தும்
அமைதியாய் வந்தமரும்
புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என்
இதய வகுப்பறையில்
நீ.

*
என் முதல் வரி
நீ காதலித்தையும்
மறுவரி
நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்

*
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்

*
உனை மாதத்தில் மூன்று
நாட்களில் என் மடியில்
தாலாட்டியதுதான் ஞாபகம்
வருகிறது தாய்மார்களை
காணுகையில்

*
வானவில்லாய் நீ வந்து
போனாலும் வானமாய்
காத்திருக்கும் என்
கவிதைகள் எப்போதும்
உனக்காக


-யாழ்_அகத்தியன்

2 comments:

சினேகிதி said...

அது என்ன தாய்மார்களைப் பார்க்கும்போது மட்டும் ஞாபகம் வருது?

யாழ்_அகத்தியன் said...

ஆசையில் அவளைத்
தினம் தாலாடினாலும்

அவள் அழும்போது
தாலாட்டியது மாதத்தில்
முன்று நாட்களில்தானே

(குழந்தை அழும்போது
தாய்மார்கள்தானே தாலட்டுகிறார்கள்
அதனால்தான் தாய்மார்களை காணுகையில்
அவள் எனக்கு அழும் குழந்தையான நாட்கள்
ஞாபகம் வருகிறது)