உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று
*
பூச் செடிக்கு பக்கத்தில்
வைத்து உன்னை படம்
எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை
தெரிகிறது
*
இரவு வந்தால் போதும்
கவிதை நேரத்துக்காய்
காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில்
அல்ல என் கைபேசிக்கு
பக்கத்தில்
*
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர
*
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்போடும்
வரைதான் அழகாக தெரிகிறது
வாசல்
-யாழ்_அகத்தியன்
Thursday, September 6, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment