Tuesday, September 18, 2007

கவிதையே தெரியுமா..?

தலைப்பின்றி
ஒரு கவிதை
அவள் பெயர்

*

வார்த்தைகள் வற்றிவிட்டது
கலந்து பேச வரச் சொல்லுங்கள்
என்னை ஏமாற்றியவளை
ஆணையிட்டான் கவிஞன்

*
காதலியின் பெயரை வைக்க
சம்மதித்தாள் என்னால்
தாயான மனசை புரிந்த
மனைவி

*
தாரம் தாயானதில்
புரிந்து கொண்டேன்
ஏன் தாரத்துக்கு முன்
தாய் என்பதை

*
இருந்த இடத்தில் இருந்து
உலகம் சுற்றுகிறாள்
என் கவிதையில் அவள்

*
கவிஞனின்
கல்யாணவீட்டில்
கவலைப்பட்டாள்
கவிஞனாக்கியவள்

*
கவனமாக இருக்கிறான்
காதலிக்கு கவிதை எழுதுபவன்
ஆயுத எழுத்தை பாவிக்கக்
கூடாது என்பதில்

*
காதலிக்கே மிஞ்சவில்லை
எப்படித் தானம் செய்வேன்
என் கவிதைகளை
அன்னைக்கு சொன்னான்
கவிமகன்

*
உனக்கு பிடிக்காத
என் கவி(குழந்)தைகளை
நீயே போட்டுவிட்டு போ
குப்பைத் தொட்டிக்குள்

*
சுமக்க முடியாமல்கவிக் கருவை
கலைக்கப் போனவன் கவலையோடு
திருப்பி வந்தான் தாமதம் என்ற
கவிதையோடு


-யாழ்_அகத்தியன்

No comments: