உனக்கு சந்தேகம்
அதிகம்தான்
இல்லையென்றால்
எதற்காக உன்னோடு
நட்சத்திரங்களையும்
கூட்டிப் போகிறாய்
*
என் இதயக்
கரும்பலகையில்
உன் பெயரே நிலவு
*
உன் இதழைத் தொட்டுக்
கொடுப்பதால்தான்
கேட்டு வாங்குகிறாய்
என் முத்தங்களை
*
முத்தக் கவிதைக்காய்
என் காது மடலையும்
விட்டு வைக்கவில்லை
உன் இதழ்கள்
*
அம்மா எவ்வளவுதான்
சுற்றிப் போட்டாலும்
உன் கண்படும் இடத்தில்
எப்போதும் நான்
-யாழ்_அகத்தியன்
Wednesday, September 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment