Friday, September 7, 2007

என்னவளே...

இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர

*
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது உன்னை
நான் கவிதையாய் காதலிப்பதை

*
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று

*
நீ
எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ
என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

*
நீ
எது கேட்டாலும்
சொல்வேன்

உன் அழகுகளில்
எந்த அழகுபிடிக்கும்
என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்

சொன்னால்...

உன் எல்லா
அழகுகளின்
கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.


-யாழ்_அகத்தியன்

No comments: