இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர
*
என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது உன்னை
நான் கவிதையாய் காதலிப்பதை
*
உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று
*
நீ
எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ
என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்
*
நீ
எது கேட்டாலும்
சொல்வேன்
உன் அழகுகளில்
எந்த அழகுபிடிக்கும்
என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்
சொன்னால்...
உன் எல்லா
அழகுகளின்
கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.
-யாழ்_அகத்தியன்
Friday, September 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment