காதலைவிட
காதலர்களே
உனை
அதிகமாய் நினைவு
படுத்துகிறார்கள்
*
நீ
வாசிக்கிறாயோ இல்லையோ
உன்னால் பலர் வாசிக்கிறார்கள்
என் கவிதைகளை
*
நீ
அறிவாளிதான்
எழுத்துப் பிழைவிட்ட என்
கவிதைகளை கண்டும் சுட்டிக்
காட்டாமல் வாசிக்கிறாயே
*
எனக்கு
கிடைக்காமப்போன
அழகான பரிசு நீ
உன்னால்
கிடைத்த அசிங்கமான
பரிசு என் பேனா
*
உனக்காக எழுதிய
கவிதைகளை மறந்துவிட்டேன்
உன்னால் எழுதிய
கவிதைகளைத்தான்
ஞாபகம் வைத்திருக்கிறேன்
தயவு செய்து
நான் மறந்ததையாவது வந்து
ஞாபகப்படுத்திவிட்டுப்போ..
மறுபடியும் நான்
காதலனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்
Tuesday, September 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment