Wednesday, September 12, 2007

சிலையானவளே...

நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்

*
அழகைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் உன்னைப்
பற்றி எழுதினேன்

உன்னைப் பற்றி எழுதச்
சொன்னார்கள்

நான் கவிதையைப்
பற்றி எழுதினேன்

*
உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்

*
நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை

*
எழுந்தாலும் விழச்
சொல்லும் உன்
கன்னக்குழி


-யாழ்_அகத்தியன்

No comments: