Friday, September 7, 2007

நிலவானவளே...

நீ
என்னைக் காதலிக்கவில்லை
என்ற சொல்லை எறிந்தால்
பதிலுக்கு உனக்கு மட்டும்

கவிதைகளை தந்து கொண்டே
இருக்கும் மரம் நான்

*
நான்
மழைக்கு
பள்ளிக்கூடம்
ஒதுங்காததில்
கவலைப்பட்டது
என்றால் அது

உனக்கு
கவிதை எழுத
துடித்த போது
மட்டும்தான்

*
நல்ல வேளை
நான் கவிதை எழுத
முயற்சிக்கவில்லை

அப்படி எழுதியிருந்தால்
உன்னை விட அழகான
கவிதையை என்னால்
எழுதியிருக்க முடியாது

*
நீ
கட்டி அணைத்தால்
தூங்காது தலையணை

நான்
கட்டிப்பிடித்தால்
தூங்காது பேனா

*
உன்னைப் பார்த்து
யார் யாரெல்லாம்
பொறாமைப்
படுகிறார்களோ

தயவு செய்து
அவர்களைப் பார்த்து நீ
கோவித்து விடாதே

அவர்கள்தான் என்
கவிதைகளின்
ரசிகர்கள்


-யாழ்_அகத்தியன்

No comments: