Saturday, September 22, 2007

காதலே போ...

உன்னால் கவிஞன்
ஆனதிலிருந்து

உனக்காக எழுதி எழுதி
என்அயுளைக் குறைத்துக்
கொண்டத்துதான் மிச்சம்

நீ
என்னை புரிந்து
கொண்டதுமில்லை
இனியும் புரிந்து
கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை

நீ
என்னை வாசித்ததில்தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்
இப்போதுதான் புரிகிறது
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக்
கொண்டேயிருக்க

என் அயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது.

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது

தண்ணீர் கூட
மூன்று தடவைக்கு
மேல் பொறுக்காது

நான்
எத்தனை ஆண்டுகள்
பொறுப்பது நீ என்னை
புரிந்து கொண்டு
வருவாய் என்று

போதும் இதுவரை
உனக்காக கவிதையோடு
நான் காத்திருந்தது

நான்
ஒன்றும் உன் பாலர்
ஆசிரியர் அல்ல
நீ
எதை எறிந்தலும்
நீ
எதை செய்தாலும்
அதை பொறுத்துக்
கொண்டு கற்றுக்
கொடுக்க

காணும் இதுவரை
என் கவிதைகளால்
நீ
அழகானதும்
நீ
சந்தோசப்பட்டதும்
என்னை
ஒரு கிறுக்கன்
என்று நினைத்து
நீ
சிரித்ததும்

ம்ம்..
என்ன சிரிக்கிறாயா?
சிரி செல்லம் சிரி
ஆசை தீர சிரி

இதுதான் நீ என்னை
நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு

ஏன் தெரியுமா?
நன்றிக்கடனுக்காய்
இதுவரை உனக்கு
மட்டுமே கவிஞனாக
இருந்த நான்

இன்று முதல் இந்த
உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க
போகிறேன்.

என்ன
கவலைப் படுகிறாயா?

கவலைப் படாதே இனி
உனக்காக என் பேனா
தலைகுனியாது இது
உறுதி.

என் கவிதையில் உன்னை
அழகாய் உக்கார வைத்த நானே
உனக்கு அர்த்தங்கள் புரியாததால்

இந்த கவிதையோடு
உன்னை மறந்துவிடுகிறேன்
என்னை மன்னித்துவிடு


-யாழ்_அகத்தியன்

No comments: